லோக்சபாவில் மோடிக்கு நமஸ்தே சொன்ன சோனியா, கடைசி வரிசையில் அமர்ந்த ராகுல்
டெல்லி: லோக்சபாவின் இன்றைய கூட்டத்தில் நடந்த சில சுவாரஸ்யமான சம்பவங்கள் பற்றி பார்ப்போம்.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பதவியேற்ற பிறகு லோக்சபா முதன்முதலாக புதன்கிழமை கூடியது. அவை கூடியதும் விபத்தில் மரணம் அடைந்த மத்திய அமைச்சர் கோபிநாத் முண்டேவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு அவை ஒத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று அவையில் நடந்த சில சுவாரஸ்யமான சம்பவங்கள் பற்றி பார்ப்போம்.

மோடி
பிரதமராக பதவியேற்ற நரேந்திர மோடி அவைக்குள் நுழைந்ததும் அனைவரும் மேஜைகளை தட்டி கரகோஷம் எழுப்பினர்.

அத்வானி
அவையின் முன்வரிசையில் உள்ள இருக்கையில் மோடி அமர அவருக்கு அருகில் மூத்த பாஜக தலைவர் அத்வானி அமர்ந்தார்.

வாழ்த்து
மோடி தனது இருக்கையில் அமரும் முன்பு அவையின் நடுவே சென்று அமைச்சர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

சோனியா
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், மோடியும் ஒருவருக்கொருவர் வணக்கம் சொல்லிக் கொண்டனர்.

முலாயம்
சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவ் மோடியுடன் கை குலுக்கி அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.

முஸ்லிம்கள்
அவையில் 20 முஸ்லிம்கள் எம்.பி.க்கள் இருந்தனர். அதில் ஒருவர் கூட உத்தர பிரதேசத்தைச் சேர்ந்தவர் இல்லை.

வருண், ராகுல்
பாஜகவின் வருண் காந்தியும், காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தியும் பின் வரிசையில் உள்ள இருக்கையில் அமர்ந்தனர்.

புதியவர்கள்
அவையில் இருந்த 543 பேரில் 315 பேர் முதல் முறையாக எம்.பி. ஆனவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications