டெல்லியில் ரூ30 கோடி போதைப் பொருள் பறிமுதல்! கூண்டோடு சிக்கிய சர்வதேச கடத்தல் கும்பல்!!
டெல்லி: சர்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பலை கூண்டோடு டெல்லி போலீசார் சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ30 கோடி மதிப்பிலான ஹெராயின் போதைப் பொருளூம் பறிமுதல் செய்யப்பட்டுளது.
டெல்லியில் அண்மையில் சிறப்பு போலீசாரால் ஆந்திர மாநிலம் கடப்பாவைச் சேர்ந்த வேணுகோபால் ரெட்டி என்ற 29 வயது இளைஞர், டெல்லியைச் சேர்ந்த 25 வயது ரக்மீத் சிங், 28 வயது சுர்பிர் சிங் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானிலிருந்து சாலை மற்றும் ரயில் மார்க்கமாக டெல்லிக்கு போதைப் பொருள் கொண்டுவரப்படுவதாகவும் பின்னர் பிற இடங்களுக்கு விநியோகிக்கப்படுவதாகவும் தெரியவந்தது.
மேலும் தென்னிந்தியாவுக்கும் இந்த போதைப் பொருள் கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து இலங்கைக்கும் கடத்தப்பட்டிருப்பதும் இந்த விசாரணையில் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து சர்வதேச கடத்தல் கும்பலை கூண்டோடு கைது செய்ய டெல்லி போலீசார் திட்டம் வகுத்தனர்.
இந்த ஒரு மாதத்தில் மட்டும் மிஸ்டர் சிங் என்ற ஒருநபரிடமும் அருண் என்ற தமிழர் ஒருவரிடம் இருந்தும் 2 பெரிய பெட்டகங்களில் போதைப் பொருளை வேணுகோபால் ரெட்டி வாங்கியிருப்பதாக போலீசில் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். மேலும் டெல்லி மகாபீர் நகரில் போதைப் பொருள் கடத்தலை ஒருங்கிணைக்கும் 2 ஆப்கான் நாட்டு சீக்கியர் பற்றிய விவரங்களையும் போலீசில் வேணுகோபால் ரெட்டி கூறியுள்ளார்.
டெல்லியை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த சர்வதேச போதை கும்பலின் ஒரு பிரிவினர் இப்போது கூண்டோடு முழுவதுமாக போலீசில் பிடிக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications