இணையதள தாக்கத்தால் நாளிதழ் விற்பனையில் சரிவு: சுப்ரீம் கோர்ட் மாஜி தலைமை நீதிபதி பேச்சு
பெங்களூர்: இணையதளமும், சமூக வலைத்தளங்களும் அச்சு ஊடக துறைக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளன என்று இந்திய உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி எம்.என்.வெங்கடாச்சலய்யா தெரிவித்தார்.

பெங்களூரின் எம்.பி.பிர்லா மேலாண்மை இன்ஸ்ட்டிடியூட்டின் 15வது பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு பேசிய வெங்கடாச்சலய்யா "உலகம் எங்குமே இணையதளம் வந்த பிறகு அச்சு ஊடகங்கள் அதாவது, நாளிதழ்கள் விற்பனை சரிந்துள்ளது. இங்கிலாந்தின் முன்னணி நாளிதழ்களான டெய்லி மிரர், கார்டியன், சண்டே மெயில் மற்றும் டெலிகிராப் ஆகியவற்றின் விற்பனை 50 சதவீதம் சரிந்துள்ளது.
இந்தியாவிலும் இணையதளம் மற்றும் சமூக வலைத்தளங்களால் நாளிதழ்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இணையதள செய்திகள் உதவிகரமாக உள்ளன. எனவே மறுநாள் காத்திருந்து செய்தித்தாளை பார்க்க யாருக்கும் பொறுமை கிடையாது. மேலும் நவீன உலகில் மக்களுக்கு சகிப்புத்தன்மை குறைந்துள்ளது. உறவினர்களிடம், பெரியவர்களிடம் விட்டுக் கொடுத்து செல்லும் குணம் குறைந்துள்ளது. இதை மாணவர்கள் வளர்த்தெடுக்க வேண்டும்" என்றார்.












Click it and Unblock the Notifications