ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு: கார்த்தி சிதம்பரத்திற்கு வெளிநாடு செல்ல அனுமதி- உச்ச நீதிமன்றம்
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் பெயிலில் வெளியே வந்திருக்கும் கார்த்தி சிதம்பரத்துக்கு வெளிநாடு செல்ல உச்சநீதிமன்றம் அனுமதி அளித்து உள்ளது.
டெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் பெயிலில் வெளியே வந்திருக்கும் கார்த்தி சிதம்பரத்துக்கு வெளிநாடு செல்ல உச்சநீதிமன்றம் அனுமதி அளித்து உள்ளது.
மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்ட ஐஎன்எக்ஸ் மீடியா என்று தனியார் நிறுவனத்தில் நடந்த முறைகேடு குறித்த வழக்கில்தான் கார்த்தி சிதம்பரம் சிக்கி தவிக்கிறார். ஐஎன்எக்ஸ் மீடியா இந்திராணி முகர்ஜி, பீட்டர் முகர்ஜி ஆகியோருக்கு சொந்தமானதாகும்.

2007ம் ஆண்டு, மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் இருந்தபோது முறைகேடு என்று குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. ரூ.305 கோடி வெளிநாட்டு நிதியைப் பெறுவதற்கு வெளிநாட்டு முதலீட்டு ஊக்குவிப்பு வாரியம் அனுமதி வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.இதில் 307 கோடி வரை முறைகேடு நடைபெற்று இருக்கலாம் என்று கணக்கிடப்பட்டு இருக்கிறது
ஐஎன்எக்ஸ் மீடியா கருப்பு பண முறைகேடு தொடர்பாக கார்த்தி சிதம்பரம் மீது ஏற்கனவே வழக்கு பதியப்பட்டு இருக்கிறது.இந்த வழக்கில் கார்த்தி சிதம்பரம் இரண்டு மாதம் முன் கைது செய்யப்பட்டார்.கிட்டத்தட்ட 14 நாட்கள் அவர் போலீஸ் கஸ்டடியில் விசாரிக்கப்பட்டார்.
அதன்பின் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். கடந்த மார்ச் 23ம் தேதி ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கார்த்தி சிதம்பரத்துக்கு டெல்லி உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. கார்த்தி சிதம்பரத்துக்கு வெளிநாடு செல்ல உச்சநீதிமன்றம் அனுமதி அளித்து உள்ளது.
அவர் அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு ஜூலை 23ல் இருந்து 31 வரை செல்ல இருக்கிறார். பல்வேறு வியாபார மற்றும் தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் வெளிநாடு செல்ல இருக்கிறார். அவர் வெளிநாட்டில் எந்த விதமான வங்கி விவகாரங்களிலும் ஈடுபட கூட என்ற விதியுடன், வெளிநாடு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications