ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு: கார்த்தி சிதம்பரத்திற்கு வெளிநாடு செல்ல அனுமதி- உச்ச நீதிமன்றம்
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் பெயிலில் வெளியே வந்திருக்கும் கார்த்தி சிதம்பரத்துக்கு வெளிநாடு செல்ல உச்சநீதிமன்றம் அனுமதி அளித்து உள்ளது.
டெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் பெயிலில் வெளியே வந்திருக்கும் கார்த்தி சிதம்பரத்துக்கு வெளிநாடு செல்ல உச்சநீதிமன்றம் அனுமதி அளித்து உள்ளது.
மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்ட ஐஎன்எக்ஸ் மீடியா என்று தனியார் நிறுவனத்தில் நடந்த முறைகேடு குறித்த வழக்கில்தான் கார்த்தி சிதம்பரம் சிக்கி தவிக்கிறார். ஐஎன்எக்ஸ் மீடியா இந்திராணி முகர்ஜி, பீட்டர் முகர்ஜி ஆகியோருக்கு சொந்தமானதாகும்.

2007ம் ஆண்டு, மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் இருந்தபோது முறைகேடு என்று குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. ரூ.305 கோடி வெளிநாட்டு நிதியைப் பெறுவதற்கு வெளிநாட்டு முதலீட்டு ஊக்குவிப்பு வாரியம் அனுமதி வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.இதில் 307 கோடி வரை முறைகேடு நடைபெற்று இருக்கலாம் என்று கணக்கிடப்பட்டு இருக்கிறது
ஐஎன்எக்ஸ் மீடியா கருப்பு பண முறைகேடு தொடர்பாக கார்த்தி சிதம்பரம் மீது ஏற்கனவே வழக்கு பதியப்பட்டு இருக்கிறது.இந்த வழக்கில் கார்த்தி சிதம்பரம் இரண்டு மாதம் முன் கைது செய்யப்பட்டார்.கிட்டத்தட்ட 14 நாட்கள் அவர் போலீஸ் கஸ்டடியில் விசாரிக்கப்பட்டார்.
அதன்பின் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். கடந்த மார்ச் 23ம் தேதி ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கார்த்தி சிதம்பரத்துக்கு டெல்லி உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. கார்த்தி சிதம்பரத்துக்கு வெளிநாடு செல்ல உச்சநீதிமன்றம் அனுமதி அளித்து உள்ளது.
அவர் அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு ஜூலை 23ல் இருந்து 31 வரை செல்ல இருக்கிறார். பல்வேறு வியாபார மற்றும் தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் வெளிநாடு செல்ல இருக்கிறார். அவர் வெளிநாட்டில் எந்த விதமான வங்கி விவகாரங்களிலும் ஈடுபட கூட என்ற விதியுடன், வெளிநாடு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications