இனி சூப்பர் மார்க்கெட்டிலும் 5 கிலோ சிலிண்டர் கிடைக்கும்…
ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் தெற்கு டெல்லியில் உள்ள தக்ஷின்புரியில் திறந்த ஜீப்பில் இன்று பிரச்சாரம் செய்தார். அப்போது யாரும் எதிர்பாராதவிதமாக அடையாளம் தெரியாத ஒருவர் கெஜ்ரிவாலை அறைந்தார். அந்த அடி கெஜ்ரிவாலின் கழுத்தில் விழுந்தது. இதை பார்த்த ஆம் ஆத்மி கட்சியினர் அந்த நபர் மீது பாய்ந்து அவரை நையப்புடைத்தனர்.
இதை பார்த்த கெஜ்ரிவால் தன்னை யார் தாக்கினாலும் யாரும் வன்முறையில் ஈடுபடக் கூடாது என்று தனது கட்சியினரை கேட்டுக் கொண்டார்.
பின்னர் கெஜ்ரிவாலை அறைந்தவரை போலீசார் கைது செய்தனர். கெஜ்ரிவால் தாக்கப்பட்டது இது ஒன்றும் முதல் முறை அன்று.
முன்னதாக கடந்த மார்ச் மாதம் 28ம் தேதி ஹரியானாவில் பிரச்சாரம் செய்தபோது ஜெக்ரிவாலை ஒருவர் தாக்கினார். அதற்கும் முன்பு பாஜக பிரதமர் வேட்பாளரான மோடி போட்டியிடும் வாரனாசியில் கெஜ்ரிவாலின் மீது மை வீசப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.