10 வது ஐபிஎல் தொடர்.. பிப்ரவரி 20ல் வீரர்கள் ஏலம்!
2017 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலம் பெங்களூருவில் வருகிற பிப். 20-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Subscribe to Oneindia Tamil
மும்பை: 10வது ஐ.பி.எல். தொடருக்கான வீரர்கள் ஏலம் வரும் பிப்ரவரி 20ம் தேதி பெங்களுருவில் நடைபெறும் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டி 2008ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. அதில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் இந்தப்போட்டி நடைபெற்று வருகிறது. 10வது ஐபிஎல் போட்டிக்கான வீரர்கள் ஏலம் நாளை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனிடையே சில காரணங்களுக்காக வீரர்கள் ஏலம் வீரர்கள் ஏலம் பிப்ரவரி கடைசி வாரத்துக்கு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது என தெரிவிக்கப்பட்டது.
இந்தநிலையில் 2017-ஆண்டுக்கான இந்தியன் பிரிமீயர் லீக் (ஐ.பி.எல்.) கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கான ஏலம் பிப்ரவரி 20-ம் தேதி பெங்களூருவில் நடைபெறும் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications