ஐபிஎல் சூதாட்ட வழக்கு: குருநாத் மெய்யப்பனுக்கு உச்சநீதிமன்ற குழு நோட்டீஸ்!
டெல்லி: ஐபிஎல் சூதாட்டம் குறித்த விசாரணையில், உச்ச நீதிமன்றம் நியமித்துள்ள குழு, சென்னை சூப்பர் கிங்ஸ்சின், குருநாத் மெய்யப்பன் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இணை உரிமையாளர் ராஜ் குந்த்ரா ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்தியாவில் நடத்தப்படும் ஐபிஎல் போட்டியில், 2013ம் ஆண்டு சீசனின்போது, சூதாட்டம் எட்டிப்பார்த்ததாக தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணையிலுள்ளது. அதில் சிஎஸ்கே அதிகாரியாக இருந்த, குருநாத் மெய்யப்பன், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் சக உரிமையாளர் ராஜ் குந்த்ரா ஆகியோர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

இதற்கான தண்டனை குறித்து முடிவெடுக்கவும், இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயல்பாடுகளை ஒழுங்குமுறைப்படுத்தவும், நீதிபதி ஆர்எம்.லோதா தலைமையில், மூன்று நீதிபதிகள் கொண்ட குழுவை உச்சநீதிமன்றம் அமைத்துள்ளது. இந்த குழு குருநாத் மெய்யப்பன், இந்தியா சிமெண்ட்ஸ் நிர்வாகம் ஆகியோர் மார்ச் 11ம்தேதிக்குள் இதுகுறித்து பதில் அளிக்க வேண்டும் என்று கூறி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. குந்த்ரா, மார்ச் 12ம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று கூறி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
குருநாத் மெய்யப்பன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிகாரி என்ற முன்முடிவின் பேரில் உரிமையாளர் ஒப்பந்தம் பிரிவு 11.3-இன் கீழ் மீறப்பட்டுள்ளது என்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை ரத்து செய்ய வேண்டும் என்றும் பிகார் கிரிக்கெட் சங்கத்தால் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி












Click it and Unblock the Notifications