ஐபிஎல் சூதாட்ட வழக்கு: குருநாத் மெய்யப்பனுக்கு உச்சநீதிமன்ற குழு நோட்டீஸ்!
டெல்லி: ஐபிஎல் சூதாட்டம் குறித்த விசாரணையில், உச்ச நீதிமன்றம் நியமித்துள்ள குழு, சென்னை சூப்பர் கிங்ஸ்சின், குருநாத் மெய்யப்பன் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இணை உரிமையாளர் ராஜ் குந்த்ரா ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்தியாவில் நடத்தப்படும் ஐபிஎல் போட்டியில், 2013ம் ஆண்டு சீசனின்போது, சூதாட்டம் எட்டிப்பார்த்ததாக தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணையிலுள்ளது. அதில் சிஎஸ்கே அதிகாரியாக இருந்த, குருநாத் மெய்யப்பன், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் சக உரிமையாளர் ராஜ் குந்த்ரா ஆகியோர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

இதற்கான தண்டனை குறித்து முடிவெடுக்கவும், இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயல்பாடுகளை ஒழுங்குமுறைப்படுத்தவும், நீதிபதி ஆர்எம்.லோதா தலைமையில், மூன்று நீதிபதிகள் கொண்ட குழுவை உச்சநீதிமன்றம் அமைத்துள்ளது. இந்த குழு குருநாத் மெய்யப்பன், இந்தியா சிமெண்ட்ஸ் நிர்வாகம் ஆகியோர் மார்ச் 11ம்தேதிக்குள் இதுகுறித்து பதில் அளிக்க வேண்டும் என்று கூறி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. குந்த்ரா, மார்ச் 12ம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று கூறி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
குருநாத் மெய்யப்பன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிகாரி என்ற முன்முடிவின் பேரில் உரிமையாளர் ஒப்பந்தம் பிரிவு 11.3-இன் கீழ் மீறப்பட்டுள்ளது என்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை ரத்து செய்ய வேண்டும் என்றும் பிகார் கிரிக்கெட் சங்கத்தால் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: உங்கள் நகை எப்போது கைக்கு வரும்? முழு விவரம் -
விஜய்யிடம் காசு வாங்கிக்கொண்டு பெரம்பூரில் பாமக போட்டி.. காடுவெட்டி குருவின் மகள் பேச்சு -
சிறகடிக்க ஆசை: மீனாவிடம் முத்து மறைக்கும் உண்மை! விஜயா பற்றி அண்ணாமலைக்கு தெரிந்த பெரிய ரகசியம்! -
விஜய்யுடன் சேர்ந்து முதல்வராக முயன்ற எடப்பாடி! நான்தான் முறியடித்தேன்.. போட்டு உடைத்த செங்கோட்டையன் -
பக்கத்திலேயே இருந்தும் கூட.. முகத்தை கூட பார்க்கவில்லை.. நோ சொன்ன ராகுல்.. கவனித்த ஸ்டாலின் -
மாதம் 1.2 கோடியா... இன்ஸ்டா அஸ்வினி அஷ் கல்லா கட்டுவது உண்மையா.. வாயை பிளக்கும் நெட்டிசன்கள் -
பிடிஆர் ஐ வீழ்த்த மதுரை மத்திய தொகுதியில் சுந்தர் சி வீசும் 1 மேஜர் அஸ்திரம்.. திமுகக்கு நெருக்கடி? -
3 மாநில சட்டசபை தேர்தல் LIVE: புதுச்சேரியில் மாலை 6 மணி நிலவரப்படி 89.2% வாக்குகள் பதிவு -
இன்னொரு சர்வேயும்.. கரெக்ட்டா இதையே சொல்லதே.. தவெக கட்சிக்கு தோல்வி.. அடித்து சொன்ன 4 கணிப்புகள்! -
ஈரான் வேலையை காட்டியது.. ஹார்முஸ்-ல் கப்பல் செல்ல அனுமதி மறுப்பு.. அமெரிக்கா ஷாக்! -
Durga Stalin: துர்கா என்னிடம் கோபித்துக் கொண்டு ஒரு வாரம் பேசலை! 5 ஆண்டு ரகசியத்தை உடைத்த ஸ்டாலின் -
இது இந்தியா இல்லை.. நேபாளத்தில் குட்கா போட்டு துப்பிய சுற்றுலா பயணிகளுக்கு மறக்க முடியாத சம்பவம்












Click it and Unblock the Notifications