ஐ.பி.எல். சூதாட்டம்... ஸ்ரீசாந்த் உள்ளிட்டோர் விடுதலையை எதிர்த்து மேல் முறையீடு செய்ய போலீசார்முடிவு
டெல்லி : ஐபிஎல் சூதாட்ட வழக்கில் ஸ்ரீசாந்த், அங்கீத் சவான், அஜித் சண்டிலா உள்ளிட்ட 35 பேர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.
கிரிக்கெட் உலகை புரட்டி எடுத்த ஐ.பி.எல். சூதாட்டம் 2013-ம் ஆண்டு மே மாதம் முதல் முறையாக வெளிச்சத்துக்கு வந்தது. அந்த ஆண்டு நடைபெற்ற 6-வது ஐ.பி.எல். தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய இந்திய முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் மற்றும் முதல்தர ஆட்டக் காரர்கள் அங்கீத் சவான், அஜித் சண்டிலா ஆகியோர் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக டெல்லி போலீசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.

இவர்கள், சூதாட்டதரகர்களிடம் இருந்து பணத்தை பெற்றுக்கொண்டு, ஆட்டத்தின் போது ‘ஸ்பாட்பிக்சிங்' என்ற சூதாட்டத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.
கைது செய்யப்பட்ட கிரிக்கெட் வீரர்கள் ஸ்ரீசாந்த், அங்கீத் சவான், அஜித் சண்டிலா உள்ளிட்டோர் உடனடியாக சிறையில் அடைக்கப்பட்டனர்.
சிறைவாசம் அனுபவித்த இவர்கள் பின்னர் ஜாமீனில் வெளிவந்தனர். ஸ்ரீசாந்த், சவானுக்கு கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க இந்திய கிரிக்கெட் வாரியம் ஆயுட்கால தடை விதித்தது.
கடந்த 2 ஆண்டுகளாக சூதாட்ட வழக்கில் அண்மையில் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு அளித்தது. தேடப்படும் குற்றவாளிகள் 6 பேரை தவிர்த்து, கிரிக்கெட் வீரர்கள் ஸ்ரீசாந்த், அஜித் சண்டிலா, அங்கீத் சவான் உள்பட எஞ்சிய 36 பேர் மீதான சூதாட்ட குற்றச்சாட்டுகளை கூடுதல் செசன்சு நீதிபதி நீனா பன்சால் கிருஷ்ணா அதிரடியாக தள்ளுபடி செய்தார். குற்றச்சாட்டுகளுக்கு போதிய ஆதாரம் இல்லாததால் அனைவரும் விடுவிக்கப்படுவதாக நீதிபதி தனது தீர்ப்பில் கூறினார்.
இந்த நிலையில், கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்படும் என்று டெல்லி போலீசார் தெரிவித்தனர்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய டெல்லி காவல் துறை சிறப்பு பிரிவு ஆணையர் எஸ்.என். ஸ்ரீவத்சவா, டெல்லி சட்டத்துறை, டெல்லி அரசு மற்றும் டெல்லி காவல் ஆணையரிடம் உரிய அனுமதி பெறப்பட்டுள்ளதாகவும் விரைவில் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.
-
விளாத்திகுளம் மாணவி கொலையில் குற்றவாளி சிக்கியது எப்படி? - தென் மண்டல ஐஜி விளக்கம்! -
சிரிச்சுக்கிட்டே சிபிஐ ஆபீஸில் இருந்து வந்த விஜய்! இரவில் விஜய்யை சந்தித்த டெல்லி அதானி தூதுவர் யார் -
பாஜகவிற்கு நல்ல செய்தி.. இன்று காலை டெல்லி விரையும் எடப்பாடி பழனிசாமி.. அமித்ஷா சந்திப்பது ஏன்? -
ஜனநாயகன் படத்தை இன்று பார்வையிடும் மறு தணிக்கை குழு.. விஜய்க்கு பெரிய ட்விஸ்ட் இருக்கு -
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை











Click it and Unblock the Notifications