16 ஆண்டுகால உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிட்டார் மணிப்பூர் இரோம் ஷர்மிளா- ஜாமீனில் விடுதலை!
இம்பால்: ஆயுதப் படையினருக்கு சிறப்பு அதிகாரம் அளிக்கும் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி மணிப்பூரில் 16 ஆண்டுகாலம் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வந்த இரோம் ஷர்மிளா இன்று தம்முடைய போராட்டத்தைக் கைவிட்டார். இதனையடுத்து நீதிமன்றம் அவரை ஜாமீனில் விடுதலை செய்தது.
மணிப்பூரில் 2000-ம் ஆண்டில் போலீஸ் வாகன அணிவகுப்பின் மீது குண்டுவெடிப்பு நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பொதுமக்கள் 10 பேர் கொல்லப்பட்டனர்.

வடகிழக்கு மாநிலங்களில் ஆயுதப் படையினருக்கு சிறப்பு அதிகாரங்கள் அளிக்கும் சட்டம் அமலில் உள்ளது. இந்த சட்டத்தை தவறாக பயன்படுத்தி பாதுகாப்பு படை வீரர்கள் பொதுமக்களை துன்புறுத்துவதால், உடனடியாக சட்டத்தை நீக்க வேண்டும் எனக்கோரி சமூக ஆர்வலரான இரோம் ஷர்மிளா தனது உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார்.
இதனால் அவரை அம்மாநில போலீசார் கைது செய்வதும் சிறை, மருத்துவமனையில் உண்ணாவிரதம் இருப்பதும் தொடர் கதையாகி வருகிறது. அவர் மீது தற்கொலை முயற்சி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில் தம்முடைய 16 ஆண்டுகால உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிடப் போவதாக இரோம் ஷர்மிளா அறிவித்திருந்தார். தம்முடைய போராட்டங்களை மத்திய அரசுகள் கண்டுகொள்ளாததால் தாம் போராட்டத்தைக் கைவிடுவதாகவும் தேர்தல் அரசியலில் ஈடுபடப் போவதாகவும் அவர் கூறியிருந்தார்.
இதனிடையே இன்று மருத்துவமனையில் இருந்து நீதிமன்றத்துக்கு இரோம் ஷர்மிளா அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு தாம் போராட்டத்தை முடித்துக் கொள்வதாக நீதிபதியிடம் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து ரூ10,000 சொந்த ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டதாக இரோம் ஷர்மிளாவின் வழக்கறிஞர் தெரிவித்தார்.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications