அடுத்தடுத்து 6 ஐ.எஸ்.ஐ. உளவாளிகள் கைது... பாகிஸ்தானின் நாசவேலை திட்டம் அம்பலம்!!
டெல்லி: நாட்டின் ராணுவ ரகசியங்களை பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.க்கு கடத்தியதாக கடந்த 2 வாரங்களில் மட்டும் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் உட்பட மொத்தம் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் இந்தியாவில் பயங்கரவாத தாக்குதலை நடத்த பாகிஸ்தான் சதித் திட்டம் தீட்டியிருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாக உளவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நாட்டின் ராணுவ வீரர்கள் நடமாட்டம் உள்ளிட்ட ரகசிய விவரங்களை ஐ.எஸ்.ஐ.க்கு கடத்தியதாக உத்தரப்பிரதேசத்தின் மீரட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டார். மேலும் 3 பேர் கொல்கத்தாவில் கைது செய்யப்பட்டனர். டெல்லி போலீசார் எல்லைப் பாதுகாப்பு படையான பி.எஸ்.எப். வீரர் உள்ளிட்ட 2 பேரை நேற்று கைது செய்துள்ளது.
இந்த 6 பேரும் ஒருவருக்கொருவருடன் தொடர்புடையவர் இல்லை. இருப்பினும் இந்தியாவில் நாசவேலைகளை நடத்துவதற்கு ஐ.எஸ்.ஐ.க்கு ரகசியங்களை பணத்துக்காக கடத்தியுள்ளனர். இதில் பி.எஸ்.எப். வீரர் ஒருவரும் கைது செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பி.எஸ்.எப். கான்ஸ்டபிள்
பிடிபட்ட பி.எஸ்.எப்.ஐ சேர்ந்த தலைமை கான்ஸ்டபிள் அப்துல் ரஷீத், காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் உளவுப்பிரிவைச் சேர்ந்தவர். அவருக்கு உடந்தையாக இருந்த மாஸ்டர் ராஜா என்ற கைஃபைதுல்லா கானும் ரஜோரி மாவட்டத்தைச் சேர்ந்தவர். ஐ.எஸ்.ஐ. உளவாளியான கான், ராணுவ ரகசியங்களை ரஷீத் மூலமே பெற்று வந்திருக்கிறார்.

மீரட்டில் புகைப்படங்கள்
இதேபோல் மீரட்டில் பிடிபட்ட ஐ.எஸ்.ஐ. ஏஜெண்ட் முகமது இஜாஸிடம் இருந்து பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த இடங்களின் புகைப்படங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அத்துடன் இந்தியாவில் தாக்குதல்களை நடத்துவதற்கு இஜாஸை ஐ.எஸ்.ஐ. பயன்படுத்த திட்டமிட்டிருந்திருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

கொல்கத்தாவில் கள்ளநோட்டுகள்
கொல்கத்தாவில் இர்ஷாத் அன்சாரி, அவரது மகன் ஆஃபாக் அன்சாரி மற்றும் இவர்களது உறவினர் முகமது ஜஹாங்கீர் ஆகியோர் தெற்கு கொல்கத்தாவின் இக்பால்பூர் போலீஸ் நிலையத்துக்குட்பட்ட டாக்டர் சுதிர் போஸ் சாலை பகுதியில் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து மொத்தம் ரூ 7 லட்சம் கள்ள நோட்டுகளும் பிடிபட்டுள்ளன.

நாசவேலைக்கு சதி
இப்படி நாடு முழுவதும் ஐ.எஸ்.ஐ. தனது ஏஜெண்ட்டுகளையும் உளவாளிகளையும் களமிறக்கியிருப்பதன் மூலம் இந்தியாவில் மேலும் ஒரு பயங்கரவாத தாக்குதலுக்கு சதித் திட்டத்துக்கு தயாராகி இருப்பது உறுதியாகி இருப்பதாக உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
பெரிய சிக்கலில் இந்தியா! 1970ல் நடந்தது போல.. இப்போதும் நடக்கப்போகுது! வெளியான ஷாக் தகவல்! -
"தேங்க் யூ இந்தியா.. உங்க உதவியை நாங்கள் மறக்கவே மாட்டோம்.." போருக்கு நடுவே நன்றி சொன்ன ஈரான் -
ஈரானில் விழுந்த குண்டுகளால்.. இந்தியாவில் உயர்ந்த குடிநீர் விலை.. இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ! -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
வந்தாச்சு LPG ATM.. இனி காத்திருக்கவே வேண்டாம்! வெறும் 2 நிமிடத்தில் புதிய சிலிண்டர் ஈஸியா வாங்கலாம் -
மாஸ் காட்டும் இந்தியா.. கடற்படையின் பலம் டபுளாகுது! உள்ளே வந்த ஐஎன்எஸ் தாராகிரி! -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரெடியா இருங்க மக்களே! சட்டுன்னு ஏறப்போகும் பெட்ரோல், டீசல் விலை! தேதி குறிச்சாச்சு! -
2 மாத வாடகை தான் அட்வான்ஸ்.. ஒழுங்கா கட்டலைனா வெளியேற்றலாம்! புதிய வாடகை விதிகள் சொல்வது என்ன -
"பணத்தை கொடுத்துட்டு.. அழுது புலம்புங்க.. நான் கேட்கிறேன்.." வினோத பிஸ்னஸை ஆரம்பித்த இளைஞர் -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர்












Click it and Unblock the Notifications