இந்தியாவில் வெளிநாட்டு டூரிஸ்டுகளை கத்தியால் குத்தி கொல்ல ஐஎஸ்ஐஎஸ் சதி.. உளவுத்துறை ஷாக் ரிப்போர்ட்
டெல்லி: இந்தியா வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கத்தியால் குத்தி சரமாரியாக படுகொலை செய்ய ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கம் திட்டமிட்டுள்ளதாக இந்திய உளவுத்துறை எச்சரித்துள்ளது.
மத்திய அரசுக்கு உளவுத்துறை வழங்கியுள்ள எச்சரிக்கையில் கூறியிருப்பதாவது: இந்தியாவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதால் தீவிரவாத இயக்கங்கள், சதி வேலையில் ஈடுபட முடியவில்லை.
பாதுகாப்பு படையினர், போலீசாரின் சோதனையில் சிக்காமல் ஆயுதங்களை கடத்தி செல்வது தீவிரவாதிகளால் முடியாத காரியமாகியுள்ளது. எனவே மாற்று வழிகளில் தாக்குதலை தொடுக்க தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளனர்.

குறிப்பாக ஐஎஸ்எஸ் தீவிரவாத அமைப்பு, இந்தியாவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளது. கத்தியை வைத்து சரமாரியாக குத்தி கொலை செய்வது அவர்கள் நோக்கம். இவர்கள் இலக்கு, வெளிநாட்டு பயணிகள்.
குறிப்பாக காஷ்மீரின் தால் ஏரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் இவர்களின் முதல் இலக்காக இருக்க கூடும். நீஸ் நகரில், லாரியை விட்டு கூட்டத்தில் மோதச் செய்து பலரை கொன்றனர் தீவிரவாதிகள். அதுவரையில் அப்படி ஒரு தாக்குதலை கேள்விப்பட்டிருக்கவில்லை. அதேபோன்ற மாற்று திட்டத்தோடு இந்தியாவில் ஐஎஸ்ஐஎஸ் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளது.
காஷ்மீர் மட்டுமின்றி, பெங்களூர், மும்பை, டெல்லி, ராஜஸ்தான் போன்ற பகுதிகளிலும் தாக்குதலை நடத்த ஐஎஸ்ஐஎஸ் திட்டமிட்டுள்ளது. அவர்கள் நோக்கம் வெளிநாட்டு சுர்றுலா பயணிகள்தான். இவ்வாறு அந்த எச்சரிக்கை கூறுகிறது.












Click it and Unblock the Notifications