கடத்தப்பட்ட 39 இந்தியத் தொழிலாளர்கள்.. விடுவிக்க ஐஎஸ்ஐஎஸ்மறுப்பு.. தொடர்பும் துண்டிப்பு!
டெல்லி: ஈராக்கில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளால் 39 இந்தியத் தொழிலாளர்கள் கடத்தப்பட்டுள்ளனர். அவர்களை விடுவிக்க முடியாது என்று தீவிரவாதிகள் மறுத்து விட்டதாலும், தகவல் தொடர்பு தற்போது துண்டிக்கப்பட்டிருப்பதாலும், இந்தியத் தொழிலாளர்களின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது.

இந்த 39 பேரும் கட்டுமானத் தொழிலாளர்கள் ஆவர். மொசூல் நகரிலிருந்து கடத்தப்பட்டுள்ளனர். ஜூன் 15ம் தேதி இவர்களை கடத்திச் சென்றனர் தீவிரவாதிகள். அதாவது இந்திய நர்சுகள் கடத்தப்படுவதற்கு முன்பே கடத்தப்பட்டவர்கள் இவர்கள்.
தற்போது இவர்களை பாதுகாப்புக் கேடயம் போல தீவிரவாதிகள் பயன்படுத்தத் திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது. அதாவது ஈராக் படைகளோ அல்லது அமெரிக்க படையோ தாக்குதல் நடத்தினால் இவர்களை முன்னிறுத்தி தாங்கள் தப்பிக்க முயல்வதாக கூறப்படுகிறது. இதனால் இந்தத் தொழிலாளர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.
இதுகுறித்து மத்திய வெளியுறவு அமைச்சகம் கூறுகையில், தீவிரவாதிகளுடன் எங்களால் முடிந்தவரை அனைத்து வழிகளிலும் பேசி வருகிறோம். ஆனால் அவர்கள் கடத்தப்பட்டவர்களை விடுவிக்க மறுத்து வருகின்றனர். தொடர்ந்து பேச்சு நடத்தப்படும். அதுவரை அனைவரும் பொறுமையாக இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே தற்போது தீவிரவாதிகளுடனான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டிருப்பதாக ஒரு தகவல் கூறுகிறது.
மொத்தம் 40 பேர் கடத்தப்பட்ட நிலையில் ஒருவர் மட்டும் தீவிரவாதிகளின் பிடியிலிருந்து தப்பி வந்தது நினைவிருக்கலாம். மற்ற 39 பேரும் தொடர்ந்து தீவிரவாதிகளின் பிடியில்தான் உள்ளனர்.
-
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
தவெகவில் யார் யார் போட்டி? 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள்.. விஜய்யின் நண்பர் ஸ்ரீநாத்துக்கும் சீட்












Click it and Unblock the Notifications