மீண்டும் வெற்றிகரமாக செயல்படத் தொடங்கியது மங்கள்யான்.. இஸ்ரோ தலைவர் தகவல்
Subscribe to Oneindia Tamil
சென்னை : மங்கள்யான் செயற்கைக்கோள் சிறிது இடைவெளிக்கு பின்னர் மீண்டும் வெற்றிகரமாக செயல்பட தொடங்கி உள்ளதாக இஸ்ரோ தலைவர் கிரண்குமார் தெரிவித்துள்ளார்.
பெங்களூரில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்த அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் மங்கள்யான் செயற்கைக்கோள் சிறிது இடைவெளிக்கு பின்னர் மீண்டும் வெற்றிகரமாக செயல்பட தொடங்கி உள்ளது மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்தார்.

தற்போது இந்த செயற்கைக்கோளை தரை கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து எந்தவித தடங்கலும் இன்றி இயக்கி வருவதாகவும், மங்கள்யான் செயற்கைக்கோள் பல அரிய தகவல்களை அனுப்பி வருவதாகவும் கிரண்குமார் கூறினார்.
இந்த மாத இறுதியில் ஜி.எஸ்.எல்.வி. மார்க்-2 ரக செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்படும் என்றும், அதற்கான தேதி முடிவு செய்யப்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
இதற்காக நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் தேதி முடிவு செய்யப்படும் என்பதை குறிப்பிட்ட இஸ்ரோ தலைவர் கிரண்குமார் சந்திரயான்-2 செயற்கைக்கோளை விண்ணில் செலுத்துவதற்கான முதற்கட்ட பணி தொடங்கப்பட்டு உள்ளதாகவும் கூறினார்.
More From
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications