Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நெல்லை மகேந்திரகிரியில் மர்ம விமானம் பறந்ததாக தகவல் இல்லை என்கிறார் இஸ்ரோ கிரண்குமார்

Subscribe to Oneindia Tamil

ஸ்ரீஹரிகோட்டா: நெல்லை மாவட்டம் மகேந்திரகிரியில் மர்ம விமானம் ஒன்று பறந்ததாகவும், அது இந்திய ரேடரில் பதிவாகி இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால், அதை பற்றி எனக்கு தெரியாது. காரணம், எங்களுக்கு அதுபோன்ற எந்த தகவலும் வரவில்லை என்று இஸ்ரோ தலைவர் கிரண்குமார் தெரிவித்துள்ளார். ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி.சி.-29 ராக்கெட் மூலம் சிங்கப்பூர் செயற்கை கோள்கள் இன்று வெற்றிகரமாக செலுத்தப்படும் என்றும் கிரண்குமார் கூறியுள்ளார்.

ISRO gears up for PSLV C-29 launch

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் ஏவுதளத்தில் இருந்து இன்று மாலை 6 மணிக்கு பி.எஸ்.எல்.வி.சி.-29 ராக்கெட் மூலம் சிங்கப்பூர் செயற்கை கோள்கள் இன்று விண்ணில் ஏவப்படுகின்றன. இதற்கான 59 மணி நேர கவுன்ட்டவுன் திங்கள்கிழமை காலை 7 மணிக்கு தொடங்கியது. வணிக ரீதியில் அனுப்பப்படும் இந்த செயற்கைகோள்கள் பூமியில் இருந்து 550 கிலோ மீட்டர் தொலைவில் நிலைநிறுத்தப்படும். பூமியின் தொலை உணர்வு, பேரிடர் கண்காணிப்பு, தகவல் தொடர்பு உள்ளிட்டவற்றிற்காக இந்த செயற்கைகோள்கள் செலுத்தப்படுகின்றன.

பி.எஸ்.எல்.வி.சி.-29 ராக்கெட் மூலம் சிங்கப்பூர் செயற்கை கோள்கள் வெற்றிகரமாக செலுத்தப்படும் என இஸ்ரோ தலைவர் கிரண்குமார் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், புதன்கிழமை மாலை 6 மணிக்கு ஸ்ரீ ஹரிகோட்டாவில் இருந்து பி.எஸ்.எல்.வி.சி-29 ராக்கெட் விண்ணில் செலுத்தப்படுகிறது. அதனுடன் சேர்த்து சிங்கப்பூரின் 6 செயற்கைகோளுடன் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இதற்கான கவுண்டவுன் திங்கட்கிழமை காலை தொடங்கியது. இந்த பணிகளை இஸ்ரோ சிறப்பாக செய்து வருகிறது.

செயற்கை கோள்கள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்படும். மேலும் 3 செயற்கை கோள்களை அடுத்த ஆண்டு விண்ணில் ஏவ திட்டமிட்டிருக்கிறோம் என்றார். மங்கள்யான் செயற்கைகோள் மிக சிறப்பாக செயல்பட்டு வருவதாக தெரிவித்த அதில் இருந்து முழுமையான தகவல் கிடைத்து வருகிறது. அதன் பணிக்கான கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

2016ம் ஆண்டு இந்தியாவில் இருந்து 3 செயற்கைக்கோள்கள் தனித்தனியாக விண்ணில் செலுத்த உள்ளோம். அதற்கான பூர்வாங்க பணிகள் நடந்து கொண்டு இருக்கின்றன.நெல்லை மாவட்டம் மகேந்திரகிரியில் மர்ம விமானம் ஒன்று பறந்ததாகவும், அது இந்திய ரேடரில் பதிவாகி இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால், அதை பற்றி எனக்கு தெரியாது. காரணம், எங்களுக்கு அதுபோன்ற எந்த தகவலும் வரவில்லை என்றம் அவர் கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+