நெல்லை மகேந்திரகிரியில் மர்ம விமானம் பறந்ததாக தகவல் இல்லை என்கிறார் இஸ்ரோ கிரண்குமார்
ஸ்ரீஹரிகோட்டா: நெல்லை மாவட்டம் மகேந்திரகிரியில் மர்ம விமானம் ஒன்று பறந்ததாகவும், அது இந்திய ரேடரில் பதிவாகி இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால், அதை பற்றி எனக்கு தெரியாது. காரணம், எங்களுக்கு அதுபோன்ற எந்த தகவலும் வரவில்லை என்று இஸ்ரோ தலைவர் கிரண்குமார் தெரிவித்துள்ளார். ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி.சி.-29 ராக்கெட் மூலம் சிங்கப்பூர் செயற்கை கோள்கள் இன்று வெற்றிகரமாக செலுத்தப்படும் என்றும் கிரண்குமார் கூறியுள்ளார்.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் ஏவுதளத்தில் இருந்து இன்று மாலை 6 மணிக்கு பி.எஸ்.எல்.வி.சி.-29 ராக்கெட் மூலம் சிங்கப்பூர் செயற்கை கோள்கள் இன்று விண்ணில் ஏவப்படுகின்றன. இதற்கான 59 மணி நேர கவுன்ட்டவுன் திங்கள்கிழமை காலை 7 மணிக்கு தொடங்கியது. வணிக ரீதியில் அனுப்பப்படும் இந்த செயற்கைகோள்கள் பூமியில் இருந்து 550 கிலோ மீட்டர் தொலைவில் நிலைநிறுத்தப்படும். பூமியின் தொலை உணர்வு, பேரிடர் கண்காணிப்பு, தகவல் தொடர்பு உள்ளிட்டவற்றிற்காக இந்த செயற்கைகோள்கள் செலுத்தப்படுகின்றன.
பி.எஸ்.எல்.வி.சி.-29 ராக்கெட் மூலம் சிங்கப்பூர் செயற்கை கோள்கள் வெற்றிகரமாக செலுத்தப்படும் என இஸ்ரோ தலைவர் கிரண்குமார் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், புதன்கிழமை மாலை 6 மணிக்கு ஸ்ரீ ஹரிகோட்டாவில் இருந்து பி.எஸ்.எல்.வி.சி-29 ராக்கெட் விண்ணில் செலுத்தப்படுகிறது. அதனுடன் சேர்த்து சிங்கப்பூரின் 6 செயற்கைகோளுடன் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இதற்கான கவுண்டவுன் திங்கட்கிழமை காலை தொடங்கியது. இந்த பணிகளை இஸ்ரோ சிறப்பாக செய்து வருகிறது.
செயற்கை கோள்கள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்படும். மேலும் 3 செயற்கை கோள்களை அடுத்த ஆண்டு விண்ணில் ஏவ திட்டமிட்டிருக்கிறோம் என்றார். மங்கள்யான் செயற்கைகோள் மிக சிறப்பாக செயல்பட்டு வருவதாக தெரிவித்த அதில் இருந்து முழுமையான தகவல் கிடைத்து வருகிறது. அதன் பணிக்கான கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
2016ம் ஆண்டு இந்தியாவில் இருந்து 3 செயற்கைக்கோள்கள் தனித்தனியாக விண்ணில் செலுத்த உள்ளோம். அதற்கான பூர்வாங்க பணிகள் நடந்து கொண்டு இருக்கின்றன.நெல்லை மாவட்டம் மகேந்திரகிரியில் மர்ம விமானம் ஒன்று பறந்ததாகவும், அது இந்திய ரேடரில் பதிவாகி இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால், அதை பற்றி எனக்கு தெரியாது. காரணம், எங்களுக்கு அதுபோன்ற எந்த தகவலும் வரவில்லை என்றம் அவர் கூறியுள்ளார்.
-
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications