200 யானைகளின் எடை கொண்ட ராக்கெட்டை விண்ணில் செலுத்துகிறது இஸ்ரோ
நாற்பத்து மூன்று மீட்டர் உயரமுள்ள ஜிஎஸ்எல்வி எம்கே 3 - டி1 (GSLV MkIII-D1) ராக்கெட் இன்று மாலை 5.28 மணிக்கு முன்னதாக ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து விண்ணில் செலுத்தப்படவுள்ளது.
ராட்சத ராக்கெட் என்று விஞ்ஞானிகளால் அழைக்கப்படும் இந்த ராக்கெட், இந்தியாவில் தயாரிக்கப்பட்டு இந்தியாவிலிருந்து செலுத்தப்படவுள்ள சக்திவாய்ந்த ராக்கெட்டாகும். மேலும் இதன் எடை முழுவதுமாக வளர்ந்த 200 யானைகளின் எடையாகும்.
ஜிஎஸ் எல் வி எம் கே3-டி1 புவியோடு இணைந்த சுற்று வட்டப்பாதையில் 4000கிகி எடை கொண்ட செயற்கைக்கோளையும், மேலும் சாதாரணமான புவி சுற்றுப் பாதையின் சற்று கீழ் உள்ள பாதையில் 10,000கிகி எடையுள்ள செயற்கைக்கோளையும் செலுத்தும் வல்லமை கொண்டதாகும்.
திரவ ஆக்ஸிஜன் மற்றும் திரவ ஹைட்ரோஜன் ஆகியவற்றை எரிப்பொருளாக பயன்படுத்தி, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட அதீத குறைவான எரிபொருளில் இயங்கும் எஞ்சினால் இந்த ராக்கெட் இயங்கவுள்ளது.
மேலும் இந்த ராக்கெட் 3,136 கிலோகிராம் எடை கொண்ட ஜி-சாட்-19 தொடர்பு செயற்கைக்கோளை சுமந்துச் சென்று, பூமிக்கு 36,000 தூரத்தில் செலுத்தவுள்ளது.
ஜிசாட் - 19 செயற்கைக்கோள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டு இந்தியாவிலிருந்து ஏவப்படும் மிகப்பெரிய செயற்கைக்கோள் ஆகும்.
முதல்முறையாக ஜி-சாட் 19 செயற்கைக்கோள், உள்நாட்டில் தயாரிக்கப்ப்ட்ட லித்தியத்தால் ஆனா பேட்டரிகளால் இயங்கப்படவுள்ளது
உயர் பாண்ட்விட்த்தை ( கற்றை அகலம்) கொண்ட சமிக்ஞை கடத்தியை தவிர்த்து, மின்னூட்டத் துகள்களின் இயல்பு மற்றும் செயற்க்கைக்கோள் மற்றும் அதன் மின்னணு பாகங்களில் விண்வெளி கதிர்வீச்சின் தாக்கம் குறித்து கண்காணிக்கவும், அறிந்து கொள்ளவும் புவியின் பகுதிகளில் கதிரியக்கம் மற்றும் ஒளியை கணக்கிடும் கருவியை செலுத்தவுள்ளது.
சிறிய வடிவ வெப்ப குழாய்கள், ஃபைபர் ஆப்டிக் கைரோஸ்கோப், மைக்ரோ எலக்ட்ரோ மெகானிகல் சிஸ்டம் ஆசிலிரோமீட்டர் மற்றும் உயர் பாண்ட்விட்த்தை பயன்படுத்தும் சமிக்ஞை கடத்தி என ஜிசாட்-19 செயற்கைக்கோளில் சில மேம்பட்ட அம்சங்களும் உள்ளன.
இந்த முயற்சி வெற்றியடைந்துவிட்டால், புவியின் சுற்றுவட்டப் பாதையில் 4 டன் எடைகொண்ட செயற்கைக்கோள்களை நமது நாட்டிலிருந்து செலுத்த முடியும் என்ற நிலையை இது உருவாக்கும் என இந்த இந்த முயற்சியில் முக்கிய நபராக திகழும் இஸ்ரோ தலைவர் டாக்டர் கஸ்தூரிரங்கன் தெரிவித்துள்ளார்.
இன்று வரை, இந்தியா, 2,300 கிகி எடைக்கு அதிகமான தொலைதொடர்பு செயற்கைக்கோள்களை செலுத்த வெளிநாடுகளில் தயாரித்த ராக்கெட்டுகளை சார்ந்து இருக்க வேண்டிய நிலை இருந்தது.
640 டன் எடை கொண்ட ராக்கெட்டை செலுத்துவது இஸ்ரோவின் சாதனைகளில் மேலும் ஒன்றாகும்.
இந்த ராக்கெட் 104 செயற்கைக்கோள்களை ஒரே சமயத்தில் செலுத்தி, ஜூன் 2014 ஆம் ஆண்டு ஒரே முறையில் 39 செயற்கைக்கோள்களை செலுத்திய ரஷியாவின் சாதனையை முறியடிக்கவுள்ளது.
15 வருடங்களாக உருவாக்கப்பட்ட இந்த ராக்கெட் எதிர்காலத்தில், விண்வெளிக்கு இந்தியா மனிதர்களை அனுப்ப உதவக்கூடும்; மேலும் இதற்காக அரசாங்கத்திடமிருந்து 15,000 கோடி ரூபாயை இஸ்ரோ கோரியுள்ளது.
பிற அறி்வியல் செய்திகள்:
நாசாவின் சூரியனை தொடும் முயற்சி; மிஷன் பெயரை மாற்றியது ஏன் ?
பருவநிலை மாற்றத்தால் வெளுத்துப்போகும் பவள பாறைகள் : எச்சரிக்கும் ஆராய்ச்சியாளர்கள்
நீங்கள் வைத்திருப்பது ஆண்ட்ராய்ட் மொபைலா? உஷார்
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications