தீபாவளிக்கு முன்பே வெற்றிகரமாக ராக்கெட் ஏவியுள்ளோம் - இஸ்ரோ தலைவர் சிவன் பெருமிதம்
பிஎஸ்எல்வி சி 49 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது அனைத்து செயற்கை கோள்களும் விண்ணில் நிலை நிறுத்தப்பட்டதாக இஸ்ரோ தலைவர் சிவன் கூறியுள்ளார்.
ஸ்ரீஹரிகோட்டா: சதீஷ் தவான் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து இன்று பிஎஸ்எல்வி சி 49 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. தீபாவளிக்கு முன்பே ராக்கெட் ஏவியுள்ளோம் என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார் இஸ்ரோ தலைவர் சிவன்.
Recommended Video
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி, ரக ராக்கெட்டுகளை தயாரித்து அவற்றில் செயற்கோள்களை பொருத்தி திட்டமிட்ட இலக்குகளில் செயற்கைகோள் களை நிலை நிறுத்தி வருகிறது.

அந்தவகையில் பூமி கண்காணிப்பு, வானிலை தகவல்கள், பேரிடர்களை முன்கூட்டியே அறிந்து கொள்வது, வாகனங்களுக்கு வழிகாட்டுவது உள்ளிட்ட பல்வேறு பயன்பாடுகளுக்காக நம் நாட்டுக்குச் சொந்தமான செயற்கோள்களை விண்ணில் நிலை நிறுத்தி வருகிறது. இவற்றுடன் வெளிநாடுகளைச் சேர்ந்த செயற்கைகோள்களையும் திட்டமிட்ட இலக்குகளில் வெற்றிகரமாக நிலை நிறுத்தி வருகிறது.
இன்றைய தினம் ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்ணில் ஆய்வு மையத்தில் உள்ள 1-வது ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி சி 49 ரக ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
இன்று செலுத்தப்பட்ட ராக்கெட்டில் பூமி கண்காணிப்பு பணிக்காக இந்தியாவுக்கு சொந்தமான இ.ஓ.எஸ். 01 என்ற பூமி கண்காணிப்பு செயற்கைகோள் பொருத்தப்பட்டு இருந்தது. இவற்றுடன் இந்த ராக்கெட்டில் வணிக ரீதியிலான 9 பன்னாட்டு செயற்கைகோள்களும் விண்ணுக்கு அனுப்பப்பட்டன.
இதில் லிதுவேனியா நாட்டைச் சேர்ந்த 1 தொழில்நுட்ப கண்டுப்பிடிப்பு செயற்கைகோள், லக்சம்பர்க் நாட்டைச் சேர்ந்த கிளியோஸ் ஸ்பேஸின் 4 கடல்சார் பயன்பாட்டு செயற்கைகோள்கள் மற்றும் அமெரிக்காவின் 4 லெமூர் செயற்கைகோள்களும் அடங்கும்.
கொரோனா பரவல் காரணமாக ராக்கெட் ஏவப்படுவது நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் 10 செயற்கைக் கோள்களுடன் இன்று பிஎஸ்எல்வி சி 49 ராக்கெட் இன்று விண்ணில் செலுத்தப்பட்டது.
ராக்கெட் விண்ணில் ஏவப்பட்ட உடன் விஞ்ஞானிகள் ஒருவருக்கொருவர் மகிழ்சியுடன் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர். ராக்கெட்டில் இருந்து செயற்கைக்கோள்கள் ஒவ்வொன்றாக விண்ணில் நிலை நிறுத்தப்பட்டன.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரோ தலைவர் சிவன், ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதாகவும் அனைத்து செயற்கைக்கோள்களும் விண்ணில் நிலை நிறுத்தப்பட்டதாகவும் கூறினார்.
கொரோனா காலத்திலும் கடுமையாக பணியாற்றிய அனைத்து விஞ்ஞானிகளுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார். தீபாவளி பண்டிகை வரப்போகிறது அனைவருக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள். தீபாவளி பண்டிகைக்கு முன்பாகவே வெற்றிகரமாக ராக்கெட்டை விண்ணில் செலுத்தியிருக்கிறோம் என்றும் பெருமிதத்துடன் கூறியுள்ளார் இஸ்ரோ தலைவர் சிவன்.
-
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications