Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

5.8 டன் எடை.. 36 செயற்கைக்கோள்கள்.. விண்ணில் பாய்ந்தது எல்விஎம்3-எம்3 ராக்கெட்!

Subscribe to Oneindia Tamil

ஸ்ரீஹரிகோட்டா: இஸ்ரோவின் எல்விஎம்3-எம்3 ராக்கெட் 36 செயற்கை கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது. ஆந்திர மாநிலம் ஸ்ரீ ஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் 2ஆவது தளத்தில் சரியாக காலை 9 மணிக்கு விண்ணில் பாய்ந்தது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தரப்பில் பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி, எஸ்எஸ்எல்வி ரக ராக்கெட்டுகளை தயாரித்து விண்ணில் செலுத்தி வருகிறது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மைய ஏவுதளத்தில் இருந்து இந்த ராக்கெட்டுகளில் செயற்கைகோள்களை பொருத்தி விண்ணில் ஏவி வருகிறது.

அந்தவகையில், அதிக எடையை சுமந்து செல்லும் ஜிஎஸ்எல்வி ராக்கெட் ரகத்தில் மற்றொரு வகையான 'எல்விஎம்3-எம்3' ராக்கெட்டை இஸ்ரோ வடிவமைத்திருக்கிறது. இதில் ஒன்வெப் இந்தியா-2க்கான 36 செயற்கைக்கோள்கள் பொருத்தப்பட்டுள்ளன.

36 செயற்கைக்கோள்கள்

36 செயற்கைக்கோள்கள்

இங்கிலாந்தின் ஒன்வெப் செயற்கைக்கோள் நிறுவனத்தின் 36 செயற்கைக்கோள்களுடன் பூமியின் தாழ்வான வட்டப்பாதையில் இந்த ராக்கெட் ஏவப்பட்டது. அப்போது தகவல் தொடர்பு செயற்கைக்கோள்கள் புவிசார் சுற்றுப்பாதையில் செலுத்தப்படும். இந்த 36 செயற்கைக்கோள்களின் மொத்த எடை சுமார் 5.8 டன்னாகும். எல்விஎம்3 எம்3 ராக்கெட் 8 டன் எடை வரை தூக்கி செல்லும் திறன் கொண்டது.

இஸ்ரோவுடன் ஒப்பந்தம்

இஸ்ரோவுடன் ஒப்பந்தம்

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தனியார் செயற்கைக்கோள்களை ஒப்பந்த அடிப்படையில் விண்ணிற்கு அனுப்பி வருகிறது. அந்த வகையில் இங்கிலாந்தைச் சேர்ந்த ஒன்வெப் எனும் தனியார் நிறுவனத்தின் 36 செயற்கைக்கோள்களை இஸ்ரோ இன்று விண்ணில் செலுத்துகிறது. இதற்கு முன்னரும் இதே எண்ணிக்கையிலான செயற்கைக்கோளை இஸ்ரோ விண்ணில் செலுத்தியிருக்கிறது.

36 செயற்கைக்கோள்கள்

36 செயற்கைக்கோள்கள்

இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான பார்தி நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது. ஏற்கனவே கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் 36 செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது. இந்த ஒப்பந்தத்தின் கடைசி தொகுதியான 36 செயற்கைக்கோள்கள் மீதம் இருக்கின்றன. இவை இன்று காலை 9 மணியளவில் விண்ணில் செலுத்தப்பட்டது.

தொழிற்நுட்ப பயன்

தொழிற்நுட்ப பயன்

இந்த செயற்கைக்கோள்கள் 450 கிலோமீட்டர் தொலைவில் 87.4 டிகிரி கோணத்தில் புவி சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட உள்ளன.இதற்கான இறுதிகட்டப்பணியான 24 மணி நேரம் 30 நிமிடம் கவுண்ட்டவுன் நேற்று காலை 8.30 மணிக்கு தொடங்கியது. தற்போது 36 செயற்கைக்கோள்களுடன் எல்விஎம்3-எம்3 ராக்கெட் விண்ணில் பாய்ந்துள்ளது. இதனால் வணிக ரீதியாக அல்லாமல், தொழிற்நுட்ப ரீதியாகவும் இந்தியாவுக்கு பயன் இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+