இந்திய ஐடி துறை ஊழியர்கள் காட்டில் அடை மழை: ஆய்வில் தகவல்
டெல்லி: இந்தியாவில், தகவல் தொழில்நுட்பம் (ஐ.டி) துறையில், அதிகபட்சமாக சம்பளம் கிடைக்கிறது. அத்துறையினருக்கு சராசரியாக மணிக்கு, 346 ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது. குறைந்தபட்சமாக, உற்பத்தி துறையில், சராசரியாக, மணிக்கு 254 ரூபாய் வழங்கப்படுகிறது என்று ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.
எம்.எஸ்.ஐ எனப்படும், மான்ஸ்டர் ஊதியக்குறியீடு அமைப்பு வெளியிட்ட ஆய்வறிக்கையில் இதுகுறித்து சுவாரசிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிற துறைகளை ஒப்பிட்டால் ஐடி துறையில் சம்பளம் கொழிப்பதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது. இந்த ஆய்வில் கூறப்பட்டிருப்பதை பாருங்கள்

சேவைத்துறை
ஐடி துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு சராசரியாக, மணிக்கு, 346 ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது. இரண்டாவது இடத்தில் பி.எப்.எஸ்.ஐ. எனப்படும், வங்கி, நிதி மற்றும் இன்சூரன்ஸ் ஆகிய சேவை துறை உள்ளது.

சம்பளம் போதவில்லை
சேவைத்துறையில் பணியாற்றுவோருக்கு சராசரியாக, மணிக்கு, 300 ரூபாய் சம்பளம் கிடைக்கிறது. நாட்டில் அதிகபட்ச சம்பளம் கிடைத்தாலும், இந்த இரு துறைகளைச் சேர்ந்த ஊழியர்கள், 'சம்பளம் போதவில்லை' என, வருத்தப்படுகின்றனர் என்கிறது அந்த ஆய்வு.

குறைந்த சம்பளம்
நாட்டிலேயே மிகக்குறைவாக சம்பளம் வாங்குவோர், உற்பத்தித் துறை ஊழியர்கள். சராசரியாக, மணிக்கு, 254 ரூபாய் மட்டுமே சம்பளமாக கிடைக்கிறது. முதுகலைப் பட்டம் பெற்றவருக்கு கூட, உற்பத்தித் துறையில், அதிகபட்சம், மணிக்கு, 260 ரூபாய் சம்பளமே தரப்படுகிறதாம்.

வெளிநாட்டு நிறுவனங்கள் பெஸ்ட்
வெளிநாட்டு நிறுவனங்கள், இந்திய நிறுவனங்களை விட, இரு மடங்கு சம்பளம் தருகின்றன. வங்கி, நிதி, இன்சூரன்ஸ் துறையில், சிறு நிறுவனங்கள், மணிக்கு, 197 ரூபாயும், பெரிய நிறுவனங்கள், மணிக்கு, 324 ரூபாய் ஊதியம் அளிக்கின்றன. இவ்வாறு அந்த ஆய்வு கூறுகிறது.

பிற நாடுகளை ஒப்பிட்டால்
ஐடி துறை ஊழியர்களுக்கு இந்திய அளவில் அதிக சம்பளம் கிடைத்தாலும்கூட, சர்வதேச அளவில் ஒப்பிட்டு பார்த்தால் இந்திய ஐடி ஊழியர்களின் ஊதியம் என்பது மிக குறைந்த அளவுதான் என்று சமீபத்தில் வெளியான மற்றொரு ஆய்வு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
நாளை முதல் வருமான வரி மாற்றம் வருகிறதா? மாத சம்பளம் வாங்குவோருக்கு புதிதாக என்னென்ன சலுகைகள்? -
இந்தியாவில் கள்ளக்காதல் ஆப் கிளிடென்.. பெண்கள் எண்ணிக்கை 148 சதவீதம் உயர்வு.. பெங்களூர் முதலிடம் -
உலகமே வியந்த இந்திய திருநங்கையர் உரிமைப் போராட்டம்.. சட்டத்தால் முடக்கப்படுகிறதா? ஐநா கவலை -
"இந்தியா எங்கள் நண்பர்.." போருக்கு மத்தியிலும் மறக்காமல் ஈரான் சொன்ன வார்த்தை.. இதுதான் முக்கியம்! -
இந்தியா முழுக்க "போர் ஊரடங்கு?" தீயாக பரவும் தகவல்.. பொதுமக்கள் அதிர்ச்சி! மத்திய அரசு சொல்வது என்ன? -
இனி E-20 petrol தான்.. பங்குகளுக்கு பறந்த உத்தரவு! பழைய வண்டிக்காரங்களுக்கு காத்திருக்கும் சிக்கல்! -
ஹார்முஸில் இந்திய கப்பல்களுக்கு ஆபத்து? LPG பிரச்சனை தீராது போலயே! மிக முக்கிய தகவல் -
துரந்தர் சம்பவம்.? பாக். கொடூர தீவிரவாதி மசூத் அசார் சகோதரர் மர்ம மரணம்! வரிசையாக விழும் விக்கெட்கள் -
ஈரான் போரால்.. புதிய சிக்கல்கள்! நிலைமையை சமாளிக்க.. பிரதமர் நரேந்திர மோடி போட்ட முக்கிய உத்தரவு! -
பெற்றோரை பார்த்து கொள்ளவில்லை என்றால் "சம்பளம்" வராது.. வருகிறது புதிய சட்டம்! தண்டனைகள் என்ன? -
மக்கள்தொகை கணக்கெடுப்பு நாளை முதல் தொடக்கம்.. என்னென்ன ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும்! -
நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் இன்று தொடக்கம்! தமிழகத்தில் எப்போது?












Click it and Unblock the Notifications