நவ.8-ம் தேதிக்கு பிறகு நடந்த ஐ.டி.ரெய்டில் ரூ.130 கோடி கருப்பு பணம் பறிமுதல்
வருவான வரித்துறை சோதனையில் ரூ130 கோடி அளவுக்கு கருப்பு பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
டெல்லி: நவம்பர் 8ம் தேதிக்கு பிறகு நாடு முழுவதும் நடத்தப்பட்ட சோதனையில் இதுவரை ரூ.130 கோடி மதிப்பிலான பணம், நகை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய நேரடி வரிகள் ஆணையம் நேற்று தகவல் வெளியிட்டுள்ளது.
கருப்புப் பணத்தை ஒழிக்க 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது. பழைய நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது. புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்தில் விடப்பட்டன. கருப்பு பணம் பதுக்கியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வருமான வரித்துறை நாடு முழுவதும் அதிரடி சோதனைகளை மேற்கொண்டது. இதில் பல்வேறு இடங்களில் கருப்பு பணம் பதுக்கியவர்கள் சிக்கினர்.

பெங்களூரில் நடந்த சோதனையில் மட்டும் 4 கோடி புதிய ரூ.2000 நோட்டு பறிமுதல் செய்யப்பட்டது. பெங்களூரு வருமான வரித்துறை பிரிவினர், மொத்தம் 18 வழக்குகளை அமலாக்கத்துறை விசாரணைக்கு பரிந்துரைத்தனர். இதனிடையே நவம்பர் 8ம் தேதிக்கு பிறகு நாடு முழுவதும் நடத்தப்பட்ட சோதனையில் இதுவரை ரூ.130 கோடி மதிப்பிலான பணம், நகை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய நேரடி வரிகள் ஆணையம் நேற்று தகவல் வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், நவம்பர் 8 ம் தேதிக்கு பிறகு வருமான வரித்துறை மேற்கொண்ட தீவிர சோதனையில், இதுவரை 400 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில், ரூ.130 கோடி மதிப்பிலான ரொக்கம் மற்றும் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
ரூ.2000 கோடி மதிப்பிலான கணக்கில் காட்டப்படாத சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன. வருமான வரிச்சட்டத்திற்கு அப்பாற்பட்ட வழக்குகள் அமலாக்க துறையும், சிபிஐயும் விசாரிக்க பரிந்துரை செய்யப்படும். முதற்கட்டமாக 30 வழக்குகள் அமலாக்கத் துறைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளன என குறிப்பிடப்பட்டுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications