பத்திரிக்கையாளர் ஜே டே கொலை வழக்கு.. சோட்டா ராஜனுக்கு ஆயுள் தண்டனை.. மும்பை நீதிமன்றம் தீர்ப்பு!
பத்திரிக்கையாளர் ஜோதிர்மே டே கொலை வழக்கில் சோட்டா ராஜன் குற்றவாளி என மும்பை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மும்பை: பத்திரிக்கையாளர் ஜோதிர்மே டே கொலை வழக்கில் சோட்டா ராஜன் குற்றவாளி என மும்பை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இவனுக்கு மும்பை நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி உள்ளது.
மும்பையில் இயங்கி வரும் ஆங்கில புலனாய்வு பத்திரிக்கை ஒன்றில் வேலைபார்த்து வந்த ஜோதிர்மே டே என்ற பத்திரிக்கையாளர், கடந்த 2011 ஆண்டு கொடூரமாக சுட்டு கொலை செய்யப்பட்டார். சாலையில் பைக்கில் செல்லும் போது, மக்கள் முன்னிலையில் கொடூரமாக கொல்லப்பட்டார்.

இவர் கொல்லப்பட்ட ஜூன் 11ம் தேதி வழக்கு பதியப்பட்டு விசாரிக்கப்பட்டது. சக பத்திரிக்கையாளர்கள் ஜிக்னா வோரா மற்றும் ஜோசப் பால்சன் உட்பட மொத்தம் 11 பேர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டார்கள். பின் இந்த வழக்கு சிபிஐ வசம் மாறிய பின் சூடுபிடித்தது. இதையடுத்து இதில் நிழல் உலக தாதா தாவுத் இப்ராஹிமிற்கும் தொடர்பு இருக்குமா என்று விசாரிக்கப்பட்டது.
கடைசியில் தாவூத்தின் கூட்டாளி சோட்டா ராஜன் இதில் சம்பந்தப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பின் சோட்டா ராஜன் கைது செய்யப்பட்ட போது, அவரிடம் இதுகுறித்து விசாரிக்கப்பட்டது. இவனின் தலைமையில்தான் ஜே டே எனப்படும் ஜோதிர்மே டே கொலை செய்யப்பட்டு இருக்கிறார். இதுகுறித்து வழக்கு விசாரணை நடந்து வந்தது.
தற்போது இந்த வழக்கில் சோட்டா ராஜன் குற்றவாளி என மும்பை நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. பத்திரிக்கையாளர்கள் ஜிக்னா வோரா மற்றும் ஜோசப் பால்சன் குற்றமற்றவர்கள் என்று விடுதலை செய்யப்பட்டனர். காலை தீர்ப்பு வழங்கப்பட்டாலும், தீர்ப்பின் தண்டனை விவரம் இப்போதான் வெளியானது.
அதன்படி சோட்டா ராஜன் உட்பட மொத்தம் 7 பேர்க்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் எல்லோருக்கும் ஆயுள்தண்டனை அளிக்கப்பட்டு இருக்கிறது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications