ஜம்மு காஷ்மீர்: 7 நாளில் 10வது முறை பாக் தாக்குதல்- 2 இந்திய வீரர்கள் படுகாயம்
Subscribe to Oneindia Tamil
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் எல்லையில் கடந்த ஒரு வாரத்தில் 10 வது முறையாக பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியுள்ளது. இத்தாக்குதலில் 2 இந்திய வீரர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

ஜம்மு காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியான ஆர்.எஸ்.புரா, அக்னூர் மற்றும் ஹிரா நகர் பகுதிகளில் நேற்று இரவு பாகிஸ்தான் ராணுவத்தினர் சரமாரி தாக்குதலை நடத்தியுள்ளனர்.
இதற்கு இந்தியத் தரப்பிலும் தக்க பதிலடி கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த மோதலின் போது இந்திய வீரர்கள் இருவர் படுகாயமடைந்தனர். கடந்த ஒரு வார காலத்தில் பாகிஸ்தான் 10 வது முறையாக தாக்குதல் நடத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications