ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான்-இந்திய ராணுவத்திற்கிடையே விடிய விடிய மோதல்
ஜம்மு: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ஆர்.எஸ். புரா செக்டரில் பாகிஸ்தான் மற்றும் இந்திய ராணுவத்திற்கு இடையே நேற்று இரவில் இருந்து தொடர்ச்சியாக மோதல் நடந்து வருகிறது.
பாகிஸ்தான் ராணுவம் கடந்த 48 மணிநேரத்தில் 6 முறை அத்துமீறி இந்திய பகுதியில் தாக்குதல் நடத்தியுள்ளது. நேற்று காலை ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள நஜ்வால்- பர்க்வால் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி சுட்டதில் 1 பெண் உள்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர். பதிலுக்கு இந்திய ராணுவம் சுட்டதில் பாகிஸ்தான் வீரர் ஒருவர் இறந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் பாகிஸ்தான் ராணுவத்தினர் நேற்று இரவு 10.30 மணிக்கு ஜம்மு காஷ்மீரில் உள்ள ஆர்.எஸ். புரா செக்டரில் தாக்குதல் நடத்தினர். பதிலுக்கு இந்திய வீரர்களும் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் ஒரு இந்திய வீரர் காயம் அடைந்துள்ளார்.
நேற்று இரவு துவங்கிய துப்பாக்கிச்சூடு தற்போதும் தொடர்ந்து நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.













Click it and Unblock the Notifications