Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சிறைகளில் நாசவேலைக்கு 'ஸ்கெட்ச்' போடும் ஜிஹாதிகள்... உச்சபட்ச கண்காணிப்பில் உளவுத்துறை

Subscribe to Oneindia Tamil

டெல்லி: சிறைகளில் இருக்கும் தீவிரவாதிகள் தப்பியோ அல்லது வழக்குகளில் இருந்து விடுதலையாகியோ வெளியே வந்து புதிய இயக்கங்களை உருவாக்கிவிடாமல் இருக்கவும் சிறைகளில் இருந்தபடியே நாசவேலைகளை நிகழ்த்துவதற்கான திட்டங்களை மேற்கொண்டுவிடாமல் இருக்கவும் உளவுத்துறை உச்சபட்ச கண்காணிப்பை மேற்கொண்டு வருகிறது.

உலகை உலுக்கி வரும் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தின் தலைவர் அபுபக்கல் அல் பக்தாதி, சிறையில் இருந்து விடுதலையான பின்னர்தான் விஸ்வரூபமெடுத்தான். இதேபோல் சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் தீவிரவாதிகள் வெளியே வந்து மிக பயங்கரமான நபர்களாக உருவெடுத்து வருவது தொடர் கதையாகிவிடுகிறது.

Jailed jihadis- IB steps up the heat

மத்திய பிரதேசத்தின் கண்ட்வா சிறையில் இருந்து வெளியே வந்த தீவிரவாதிகள் உளவுத் துறைக்கு பெரும் தலைவலியாக குடைச்சல் கொடுத்து வந்ததையும் நினைவில் கொள்ளலாம்.. கண்ட்வா சிறையில் இருந்து தப்பிய 5 சிமி தீவிரவாதிகள் சென்னை சென்ட்ரல் ரயில் குண்டுவெடிப்பு, தெலுங்கானாவில் கொள்ளைகள், பெங்களூரு சர்ச் தெரு குண்டுவெடிப்பு என அடுத்தடுத்து பல சம்பவங்களை அரங்கேற்றினர். ஒருவழியாக இந்த பயங்கரவாதிகள் பிடிபட்டு வருகின்றனர்.

இருப்பினும் நீண்டகாலம் சிறையில் இருக்கும் தீவிரவாதிகள் மற்ற தீவிரவாதிகளுடன் எளிதில் தொடர்பு கொண்டு இத்தகைய தாக்குதல்களை நடத்துவது வசதியாகிவிடுகிறது. இதனால்தான் தற்போது உளவுத்துறை இத்தகைய தீவிரவாதிகள் சிறைகளில் சந்திப்பதைத் தடுக்குமாறு சிறை நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளது. சிறைச்சாலைகளே நாசவேலைகளை திட்டமிடும் மையங்களாக உருமாறுவதைத் தடுக்குமாறும் அறிவுறுத்தியுள்ளது.

சிறைகளில் சந்தித்துக் கொள்ளும் தீவிரவாதிகள் தங்களுக்குள் நாசவேலை திட்டங்களை முதலில் பகிர்ந்து கொள்கின்றனர்.. பின்னர் தங்களை சந்திக்கும் வரும் உறவினர்கள் மூலமாக வெளியே உள்ள தீவிரவாதிகளுக்கு சதித் திட்டங்களை தெரிவிக்கின்றனர். இப்படித்தான் ஹைதராபாத் சிறையில் உள்ள தீவிரவாதி யாசின் பட்கல் இதர தீவிரவாத சகாக்களுடன் சேர்ந்து தப்பிக்க திட்டமிட்டிருந்தான் என்பதும் தெரியவந்தது.

அண்மையில் குஜராத் சிறை ஒன்றில் சுரங்கம் அமைத்து சில இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாதிகள் தப்ப முயற்சித்ததும் தெரியவந்தது. இதனால் சிறை நிர்வாகங்கள் படு உஷாராக இருக்குமாறு உளவுத்துறை அறிவுறுத்தலை பிறப்பித்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+