பட்ஜெட் 2018: 18,000 கி.மீ. நீளத்துக்கு புதிய இரட்டை ரயில் பாதைகள்- ஜேட்லி
இன்றைய தினம் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் 18,000 கி.மீ. நீளத்துக்கு புதிய இரட்டை ரயில் பாதைகள் அமைக்கப்படும் என்று ஜேட்லி தெரிவித்தார்.
Recommended Video
டெல்லி: இன்றைய தினம் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் 18,000 கி.மீ. நீளத்துக்கு புதிய இரட்டை ரயில் பாதைகள் அமைக்கப்படும் என்று ஜேட்லி தெரிவித்தார்.
2018-2019-ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. மேலும் ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பிறகு தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட்டில் நிதியமைச்சர் அருண் ஜேட்லி ஆங்கிலத்திலும், இந்தியிலும் வாசித்து வருகிறார்.
அப்போது அவர் கூறுகையில் , 18,000 கி.மீ. நீளத்துக்கு புதிய இரட்டை ரயில் பாதைகள் அமைக்கப்படும். 99 புதிய நகரங்களும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சேர்க்கப்படும்.
தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் வளர்ச்சிக்கு ரூ. 1.5 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும். கல்வித்துறை வளர்ச்சிக்கு ரூ. 1 லட்சம் கோடி ஒதுக்கப்படும்.
அனைத்து ரயில்களிலும் வைபை வசதி, சிசிடிவி பொருத்தப்படும். 25,000 பேருக்கு அதிகமாக பயன்படுத்தும் அனைத்து ரயில் நிலையங்களிலும் எஸ்கலேட்டர்கள் அமைக்கப்படும்.
1 லட்சம் கிராமங்களுக்கு இணையதள வசதி ஏற்படுத்தப்படும். கிராமங்களில் 5 லட்சம் வைஃபை வசதிகள் அமைக்கப்படும் என்றார் அவர்.