ப்ரீ செக்ஸை முன்வைத்து ஜல்லிக்கட்டு புரட்சியை விமர்சித்த ராதாராஜன் மீது போலீசில் புகார்
பரீ செக்ஸை முன்வைத்து ஜல்லிக்கட்டு புரட்சியை விமர்சித்த 'நாய்' ஆர்வலர் ராதாராஜன் மீது சென்னை போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
சென்னை: ஜல்லிக்கட்டு புரட்சியில் குதித்த இளைஞர் படையை ப்ரீ செக்ஸை முன்வைத்து விமர்சித்த பீட்டா ஆதரவாளரும் நாய் ஆர்வலருமான ராதாராஜன் மீது சென்னை போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
பல்லாயிரம் ஆண்டுகால தமிழினத்தின் பண்பாட்டு அடையாளமான ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்தற்கு காரணமே பீட்டா என்ற அமெரிக்கா தொண்டு நிறுவனம்தான். தமிழினத்தின் வீதிகள் தோறும் போராடும் இளைஞர்களின் முதன்மை கோரிக்கைகளில் ஒன்று பீட்டாவை தடை செய் என்பதுதான்.

இப்படி லட்சோப லட்சம் இளைஞர்கள் உரிமை புரட்சியில் குதித்ததை ஆபாசமாக கொச்சைப்படுத்தியிருந்தார் பீட்டா ஆதரவாளர் ராதாராஜன். லண்டன் பிபிசி தமிழோசை வானொலிக்கு ராதாராஜன் அளித்த பேட்டியில், ப்ரீ செக்ஸ் டாபிக்கில் டிஸ்கசன் வைத்தால் 50,000 பேர் வருவாங்கதானே அதைப் போன்றதுதான் ஜல்லிக்கட்டு புரட்சியில் குதித்தவர்கள் என விமர்சித்திருந்தார்.
அவரது இந்த விமர்சனம் ஒட்டுமொத்தமாக தமிழகத்தை கொந்தளிக்க வைத்துவிட்டது. சமூக வலைதளங்களில் ராதாராஜன் மீது கடும் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.
இதனிடையே சென்னை போலீஸ் கமிஷ்னரிடத்தில் சென்னையை சேர்ந்த பொன்னுசாமி என்பவர் இன்று ஒரு புகார் மனு கொடுத்துள்ளார். அதில் மெரினாவில் போராடுபவர்களை கொச்சைப்படுத்தும் வகையில் ராதாராஜன் இழிவாக பேசியுள்ளார்; பெண்களை ஆபாசமாக பேசுதல்; பெண்கள் வன்கொடுமை சட்டம் ஆகிய பிரிவுகளில் ராதாராஜன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
-
கயத்தாறு சம்பவம்.. ஆணவக்கொலை அல்ல! காவல்துறை அளித்த விளக்கம்! வதந்தி பரப்ப வேண்டாம் என வார்னிங் -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு!












Click it and Unblock the Notifications