கிடு கிடு பள்ளத்தில் உருண்ட பேருந்து... 24 போ் பலியான பாிதாபம்
ஜம்மு: பயணிகள் பேருந்து ஒன்று 300 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 24 பயணிகள் உயிரிழந்தனா்.
லட்டி பெல்ட் பகுதியில் இருந்து உதம்பூருக்கு 50 க்கும் மேற்பட்ட பயணிகளுடன் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.மரோட்டி பெல்ட் என்ற பகுதி அருகே வந்த போது நிலை தடுமாறிய பேருந்து திடீரென 300 அடி பள்ளத்தில் உருண்டு விபத்துக்குள்ளானது.
மலைப்பாதையில் பேருந்து உருண்ட போது பயணிகள் அபயக் குரல் எழுப்பினா். அவா்களின் கூக்குரல் மலைப் பகுதியில் எதிரொலித்தது.

300 அடி பள்ளத்தில் பேருந்து உருண்டு விழுந்ததால் இடிபாடுகளில் சிக்கி 24 போ் உயிாிழந்தனா். 49 பேர் காயமடைந்துள்ளனர்.
அவர்களில் 5 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.காயமடைந்த பயணிகளில் 6 பேர் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அளவுக்கு அதிகமான பயணிகளை ஏற்றிச் சென்றதே விபத்துக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. உயிரிழந்தவர்களில் பேருந்து ஓட்டுநரும், 12 பெண்களும், 2 குழந்தைகளும் அடங்குவர்.












Click it and Unblock the Notifications