ஒரே நேரத்தில் நுழைய முயன்ற பாக். ராணுவமும், விமானப்படையும்.. இந்தியா அதிரடியான பதில் தாக்குதல்!
இந்திய வான்வெளி எல்லைக்குள் நுழைய பாகிஸ்தான் போர் விமானங்கள் மீண்டும் முயற்சி செய்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஸ்ரீநகர்: இந்திய வான்வெளி எல்லைக்குள் நுழைய பாகிஸ்தான் போர் விமானங்கள் மீண்டும் முயற்சி செய்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியா பாகிஸ்தான் எல்லையில் காலையில் இருந்து நீடித்து வந்த சிறிய அமைதி மீண்டும் கலைந்து இருக்கிறது. இந்தியா - பாகிஸ்தான் வான்வெளி மீண்டும் பதற்றம் அடைய தொடங்கி உள்ளது.
பாகிஸ்தான் ராணுவமும் விமானப்படையும் ஒரே நேரத்தில் இந்திய எல்லையில் அத்து மீறி உள்ளது. இதனால் தற்போது இந்திய ராணுவம் அங்கு குவிக்கப்பட்டுள்ளது.

என்ன ஆனது
இந்திய வான்வெளி எல்லைக்குள் நுழைய பாகிஸ்தான் போர் விமானங்கள் இன்று மீண்டும் முயன்றது. சில நிமிடங்களுக்கு முன் இந்த சம்பவம் நடந்தது. காஷ்மீரின் மேந்திரா பகுதியில் பாகிஸ்தான் விமானங்கள் ஊடுருவ முயற்சி செய்து இருக்கிறது. இது சரியாக காஷ்மீர் - பாகிஸ்தான் எல்லை ஆகும்.

முறியடித்தனர்
பாகிஸ்தானின் இரண்டிற்கும் மேற்பட்ட போர் விமானங்கள் உள்ளே வந்து தாக்குதல் நடத்த முயன்றுள்ளது. ஆனால் இந்திய போர் விமானங்கள் அங்கு பாதுகாப்பிற்காகவும், பதில் தாக்குதல் நடத்தவும் உடனே வேகமாக வந்தது. அங்கு இந்திய போர் விமானங்கள் திரண்டதால் உடனடியாக பாக். விமானங்கள் திரும்பி சென்றது. இதனால் பெரிய அசம்பாவிதம் முறியடிக்கப்பட்டது.

ஆனால் என்ன
ஆனால் அதேசமயம் கீழே பாகிஸ்தானின் ராணுவமும் இந்தியா மீது தாக்குதல் நடத்தி இருக்கிறது. சரியாக விமானப்படை உள்ளே வந்த நேரத்தில் தாக்குதல் நடந்துள்ளது. காஷ்மீரின் கிருஷ்ணகாதி எனப்படும் பூன்ச் அருகே உள்ள கிராமத்தில் நடந்தது.

காலை
இன்று காலையும் இதே இடத்தில்தான் பாகிஸ்தான் தாக்குதல் நிகழ்த்தியது. இதையடுத்து தற்போது இந்திய ராணுவமும் அவர்கள் மீது பதில் தாக்குதல் நிகழ்த்தி உள்ளது. சுமார் 30 நிமிடம் தாக்குதல் நீடித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து கூடுதல் விவரம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications