கோமாவில் உள்ள ஜஸ்வந்த்சிங்கிற்கு காய்ச்சல்: நிலைமை கவலைக்கிடம்
டெல்லி: கோமா நிலையிலுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங்கிற்கு காய்ச்சல் அடிப்பதால் நிலைமை மேலும் சிக்கலாகியுள்ளதாக ராணுவ மருத்துவமனை டாக்டர் தெரிவித்தார்.

வாஜ்பாய் தலைமையிலான பாஜக அரசில் மத்திய அமைச்சராக பதவி வகித்தவர் ஜஸ்வந்த்சிங் (76). நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
இந்நிலையில் டெல்லியில் உள்ள அவரது வீட்டில் வியாழக்கிழமை இரவு தவறி விழுந்தார். இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, டெல்லி ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கோமா நிலையில் உள்ள ஜஸ்வந்த் சிங் நிலைமை, இன்று மேலும் கவலைக்கிடமாகியுள்ளது.
இதுகுறித்து ராணுவ மருத்துவமனை டாக்டர் ஒருவர் தெரிவித்ததாவது: ஜஸ்வந்த் சிங் நிலைமை இன்று மிகவும் மோசமாகியுள்ளது. லேசான காய்ச்சலும் சேர்ந்துகொண்டுள்ளதால் சிகிச்சையளிப்பதில் சிக்கல் அதிகரித்துள்ளது. இவ்வாறு அந்த டாக்டர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications