ஐம்மு-காஷ்மீரில் ராணுவ வீரரை கடத்தி சென்ற தீவிரவாதிகள்? எரிந்த நிலையில் வாகனம் மீட்பு
ஸ்ரீநகர்: ஐம்மு-காஷ்மீரில் ஞாயிற்றுக்கிழமை மாலை ராணுவ வீரர் ஒருவரை காணவில்லை, அவரது வாகனம் ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் எரிக்கப்பட்டதாக அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனர். அவர் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டிருக்கலாம் என்று அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
162 பட்டாலியன் (டிஏ) பிரிவைச் சேர்ந்த ராணுவவீரர் ஷாகிர் மன்சூர் ஞாயிற்றுக்கிழமை காணாமல் போனார். அவரது வாகனம் தெற்கு காஷ்மீரின் குல்காமில் எரிக்கப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது என்று ராணுவ செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

குல்காமின் அண்டை மாவட்டம் ஷோபியன் மாவட்டத்தில் பணியாற்றி வந்த இந்த ராணுவ வீரர் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது என்று ராணுவ செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

இந்திய ராணுவத்தின் Chinar Corps பிரிவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் தளத்தில் இதுபற்றி வெளியிட்டப்பட்டுள்ள பதிவில் : "162 பட்டாலியன் (டிஏ) இன் ரைபிள்மேன் ஷாகிர் மன்சூர் நேற்று மாலை 5 மணி முதல் காணவில்லை. அவரது எரிந்த கார் குல்கம் அருகே அநாதையாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஷாகிர் மன்சூரை தீவிரவாதிகள் கடத்தியிருக்கலாம் என சந்தேகிக்கிறோம். தேடல் நடந்து வருகிறது ". என்று கூறப்பட்டுள்ளது,












Click it and Unblock the Notifications