ஜெ. வழக்கு: இரண்டு, மூன்று நாட்களில் இறுதி முடிவு- சட்ட அமைச்சர் ஜெயச்சந்திரா பேட்டி!
பெங்களூரு: ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் மேல்முறையீடு செய்ய கர்நாடக அட்வகேட் ஜெனரல் பரிந்துரை அளித்துள்ள நிலையில், அடுத்தகட்டமாக என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பது குறித்து கர்நாடக சட்டத்துறை அமைச்சர் ஜெயச்சந்திரா இன்று பேட்டியளித்தார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவை கர்நாடக ஹைகோர்ட் விடுதலை செய்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று சிறப்பு வழக்கறிஞர் ஆச்சாரியா, அரசு தலைமை வழக்கறிஞர் ரவிவர்மகுமார் ஆகியோர் அரசுக்கு சிபாரிசு செய்திருந்தனர்.

தலைமை வக்கீல் விளக்கம்
இந்நிலையில் கர்நாடக அரசு வழக்கு தொடர்பான இரு சந்தேகங்களை ரவிவர்மகுமாரிடம் கேட்டிருந்தது. அதற்கும் ரவிவர்மகுமார் விளக்கம் அளித்துள்ளார். அதாவது ஆச்சாரியாவை சிறப்பு வக்கீலாக தொடரச் செய்வதில் கர்நாடக அரசுக்கு எந்த தடையும் இல்லை என்றும், மேல்முறையீடு செய்ய ஆளுநர் அனுமதி தேவையில்லை என்றும் ரவிவர்மகுமார் தெளிவுபடுத்தி அரசுக்கு அறிக்கையளித்துள்ளார்.

எச்சரிக்கை
ரவிவர்மகுமார் அளித்த அறிக்கையில், கர்நாடக அரசு உடனடியாக மேல்முறையீடு செய்ய வேண்டும், அல்லது உச்சநீதிமன்றம், கர்நாடகா மீது வைத்திருந்த நம்பிக்கைக்கு மோசடி செய்தது போல ஆகிவிடும். நீதித்துறையை கேலிக்கூத்தாக்கும் செயலாகிவிடும் என்றெல்லாம் குறிப்பிட்டுள்ளார்.

காலம் உள்ளது
இதுகுறித்து கர்நாடக சட்ட அமைச்சர் ஜெயச்சந்திராவை நிருபர்கள் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் கூறியதாவது: இந்த வழக்கில் மேல்முறையீடு செய்ய அதிகபட்சம் 90 நாட்கள் கால அவகாசம் உள்ளது. தற்போது தீர்ப்பு வெளியாகி 20 நாட்கள்தான் ஆகியுள்ளன. நாங்கள் அனைத்து கோணத்திலும் ஆய்வு நடத்திய பிறகுதான், முடிவெடுக்க முடியும்.

இனிதான் படிக்க வேண்டும்
அட்வகேட் ஜெனரலிடம் இருந்து சந்தேகங்களை நிவர்த்தி செய்து வந்த அறிக்கையை பெற்றுள்ளேன். அந்த அறிக்கையை இன்னும் படிக்கவில்லை. கிராம பஞ்சாயத்து தேர்தலையொட்டி, கிராமங்களில் சுற்றுப் பயணம் செய்துகொண்டிருந்தேன். எனவே இனிதான் அறிக்கையை படிக்க வேண்டும். இன்னும் இரண்டு மூன்று நாட்களில் இதன்மீது முடிவெடுக்கப்படும் என்றார்.

கேபினெட் பற்றி தெரியாது
திங்கள்கிழமை நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் இதுகுறித்து முடிவெடுக்கப்படுமா என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ஜெயச்சந்திரா "வழக்கில் வெளியான தீர்ப்பு, ஆச்சாரியா அளித்த பரிந்துரை, அட்வகேட் ஜெனரல் கொடுத்த விளக்கம் போன்ற பல அம்சங்களை சட்டத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இதையெல்லாம் படித்து பார்த்து, நான் திருப்தியடைந்த பிறகுதான் அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி முடிவெடுக்க முடியும். அமைச்சரவையுடன் இதை முடிச்சு போட விரும்பவில்லை" என்றார். அமைச்சரவை கூட்டத்துக்கு முன்பு, ஜெயச்சந்திரா திருப்தியடைந்தால், கேபினெட்டில் இதுகுறித்து விவாதிக்கப்படும், அல்லது மேலும் சில நாட்களுக்கு ஒத்திப்போடப்படும் என்று தெரிகிறது.
-
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி -
சல்லி சல்லியாக நொறுங்கிடுச்சே.. துபாய் அஸ்திவாரமே ஆடுதுங்க.. 'சொர்க்க பூமி' இப்படி ஆகிடுச்சே! -
விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்? -
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
Election Exclusive: நெருங்குது கிளைமேக்ஸ்..தாமரையுடன் கைகோர்க்கும் விசில்! நள்ளிரவில் ஹோட்டல் மீட்டிங்.. டோட்டல் மாற்றம் -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
விஜய்க்கு புது ஆஃபர் கொடுக்கும் பாஜக? 80 தொகுதி + துணை முதல்வர் பதவி! டெல்லியில் பரபர பாலிடிக்ஸ் -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
தேர்தல் தேதிகளை அறிவித்த நொடி.. சட்டென தேனி வருசநாடு பற்றி பேசிய தேர்தல் ஆணையர்.. ஏன் தெரியுமா? -
பெரிய பிரச்சனையில் சிக்கும் இந்தியா! அமெரிக்காவுடன் சேர்ந்ததுக்கு மொத்தமா முடிய போகுது! -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி!












Click it and Unblock the Notifications