ஹைகோர்ட் தீர்ப்புக்கு தடை வாங்கினால், ஜெ. முதல்வர் ஆனாலும் மீண்டும் பதவி பறிபோகும்?
பெங்களூரு: ஜெயயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடக ஹைகோர்ட் அளித்த தீர்ப்புக்ககு தடை வாங்க திட்டமிட்டுள்ளதாக அரசு வக்கீல் ஆச்சாரியா கூறியுள்ள நிலையில், அவ்வாறு தடை வாங்கினால் அரசியல் ரீதியாக ஜெயலலிதாவுக்கு அது பின்னடைவை ஏற்படுத்தும் என்கின்றனர் சட்ட வல்லுனர்கள்.
சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரும் குற்றமற்றவர்கள் என்று கூறப்பட்டது. இதையடுத்து சிறப்பு நீதிமன்றம் வழங்கிய 4 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.100 கோடி அபராதத்தில் இருந்து ஜெயலலிதா தப்பினார்.

கூட்டல் பிழை
ஆனால், ஹைகோர்ட் நீதிபதி குமாரசாமி வழங்கிய தீர்ப்பின் நகலை படித்து பார்த்த சட்ட வல்லுநர்கள் அதிர்ச்சியடைந்தனர். ஏனெனில், அதில் ஜெயலலிதா பெற்ற கடன் தொகை மதிப்பு அதிகரித்து காட்டப்பட்டுள்ளது. கூட்டல் கணக்கில் ஏற்பட்ட பிழையே இந்த தவறுக்கு காரணம் என்று தெரிகிறது.

77 சதவீதம்
வருமானத்துக்கு அதிகமாக 8.12 சதவீதம் அளவுக்கு ஜெயலலிதா சொத்து குவித்திருப்பதால், அது குற்றமில்லை என்று நீதிபதி தனது தீர்ப்பில் கூறியிருந்தார். ஆனால், சரியாக கூட்டிப் பார்த்தால், 76.75 சதவீதம் அளவுக்கு கூடுதலாக சொத்து குவித்திருப்பது தெரியவந்துள்ளது.

மேல்முறையீடு செய்ய கோரிக்கை
எனவே உடனடியாக உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று தமிழக எதிர்க்கட்சிகள் கோரிக்கைவிடுக்க ஆரம்பித்துள்ளன. இந்நிலையில் செய்தியாளர்களிடம் நேற்று பேசிய அரசு வழக்கறிஞர் ஆச்சாரியா, மேல்முறையீடு செய்வது குறித்து இன்னும் அரசு முடிவெடுக்கவில்லை என்றபோதிலும், இந்த வழக்கு மேல்முறையீட்டுக்கு உகந்ததுதான் என்றார்.

இடைக்கால தடை
மேலும் ஆச்சாரியா கூறுகையில், சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யும்போது, ஹைகோர்ட் தீர்ப்புக்கு இடைக்கால தடை வழங்க வேண்டும் என்பதுதான் முதல் கோரிக்கையாக வைக்கப்படும் என்றார்.

உச்சநீதிமன்றத்தில் கிடப்பு
உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய கர்நாடகாவுக்கு 90 நாட்கள் கால அவகாசம் உள்ளது. அதற்குள் அப்பீல் செய்தாலும், சுப்ரீம்கோர்ட் இந்த வழக்கில் எத்தனை வாய்தாக்கள் கொடுக்கப்போகிறதோ தெரியாது. ஏனெனில், பொதுவாக இதுபோன்ற அப்பீல் வழக்குகள் பல, உச்ச நீதிமன்றத்தில் நீண்ட ஆண்டுகளாக நிலுவையிலுள்ளன. அத்தோடு இதுவும், பத்தோடு பதினொன்றாக போடப்படும்.

தடை வாங்கினால் வேகம்
ஆனால், முதலில் ஹைகோர்ட் தீர்ப்புக்கு இடைக்கால தடை வாங்கினால், வழக்கை விரைந்து முடிக்க வேண்டிய கட்டாயம் குற்றம்சாட்டப்பட்ட தரப்புக்கும் வந்துவிடும். இரு தரப்பு நெருக்கடியாலும் கேஸ் வேகம் பிடிக்க வாய்ப்புள்ளது.

எளிதில் கிடைக்கும்
இதில் மற்றொரு விவகாரத்தை கவனிக்க வேண்டியதும் அவசியம், தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்தால், அது ஜெயலலிதா மீண்டும் முதல்வராக பதவி ஏற்ற பின் அவரது பதவிக்கும் வேட்டு வைக்கும் என்கின்றனர் சட்ட வல்லுநர்கள். ஏனெனில் கணக்கில் பிழை இருப்பது தெரியவந்தால், அதை ஆதாரமாக கொண்டு வழங்கப்பட்ட தீர்ப்புக்கும் எளிதில் இடைக்கால தடை கிடைத்துவிடும் என்று சட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர்.

முதல்வர் பதவி
ஹைகோர்ட் தீர்ப்புக்கு தடை விதிக்கப்பட்டால், ஜெயலலிதா கீழ்மை நீதிமன்றம் அறிவித்தபடி குற்றவாளியாகவே தொடரும் நிலை ஏற்பட்டுவிடும். எனவே அரசு பதவிகளை அவர் வகிக்க முடியாது. இந்த சூழ்நிலையில், மீண்டும் முதல்வராக ஜெயலலிதா பதவி ஏற்றாலும் அவர் தனது பதவியை மீண்டும் பறிகொடுக்க நேரிடும்.

சு.சுவாமி சூசகம்
இதைத்தான் சுப்பிரமணியன் சுவாமியும் நேற்று சூசகமாக தெரிவித்தார். ஹைகோர்ட் தீர்ப்பு ஒரு கணித பிழையின் சோகம் என்று வர்ணித்த சு.சுவாமி, சுப்ரீம் கோர்ட்டில் அப்பீலுக்கு செல்வேன் என்றும், அப்போது ஜெ. முதல்வராக இருந்தால் அந்த பதவியை இழப்பார் என்றும் சு.சுவாமி கூறியிருந்தார்.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications