18 வருடமாக இழுக்கப்பட்ட வழக்கில், மூன்றே நிமிடங்களில் தீர்ப்பு!
பெங்களூரு: சொத்துக்குவிப்பு அப்பீல் வழக்கில், கர்நாடக ஹைகோர்ட் நீதிபதி குமாரசாமி வெறும் 3 நிமிடங்களில் தீர்ப்பை வாசித்தார்.
சொத்துக்குவிப்பு வழக்கில், பெங்களூரு சிறப்பு கோர்ட் ஜெயலலிதா உள்ளிட்ட நால்வருக்கும் சிறை தண்டனை, அபராதம் விதித்து தீர்ப்பளித்தது.

ஜெயலலிதா தரப்பு செய்த மேல்முறையீட்டில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரும் விடுதலை செய்யப்படுவதாக நீதிபதி குமாராசாமி அறிவித்தார்.
காலை 11 மணிக்கு சரியாக கோர்ட் ஹாலுக்குள் வந்த குமாரசாமி, 919 பக்கங்கள் கொண்ட தீர்ப்பின், முக்கிய அம்சங்களை, 3 நிமிடங்களில் தீர்ப்பை வாசித்து முடித்து கிளம்பினார்.
தமிழகம் மற்றும் கர்நாடகாவின் பல்வேறு கோர்ட்டுகளில் 18 ஆண்டுகள் நடந்து வந்த இந்த வழக்கின் தீர்ப்பை 3 நிமிடங்களில் வாசித்து முடித்துவிட்டார் குமாரசாமி.
சீனியரை தூக்கி வைத்துக் கொண்டாடிய அதிமுக வக்கீல்கள்
நீதிபதி குமாரசாமி தனது தீர்ப்பை வாசித்து முடித்து விட்டுக் கிளம்பியதும், நீதிபதி குமாரசாமிக்கு அதிமுக வக்கீல்கள் பெரிய கும்பிடு போட்டு வணக்கம் செலுத்தினர். பின்னர் தங்களது சீனியர் வக்கீலை தூக்கி தோளில் வைத்துக் கொண்டு ஜெயலலிதாவை வாழ்த்திக் கோஷமிட்டனர்.
கண்டித்த மற்ற சீனியர்கள் - போலீஸார்
இதைப் பார்த்து அங்கு கூடியிருந்த மற்ற வக்கீல்கள், குறிப்பாக பிற சீனியர் வக்கீல்கள் இதுபோல கோர்ட்டை அவமதிக்கும் வகையில் நடந்து கொள்ளக் கூடாது என்று அதிமுக வக்கீல்களைக் கண்டித்தனர். அங்கிருந்த போலீஸாரும் கண்டித்தனர். இதையடுத்து அதிமுக வக்கீல்கள் அமைதியாக வெளியேறினர்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications