பட்டியலில் இல்லை: ஜெ. மேல்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு வரவில்லை

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வராது என்று கூறப்படுகிறது.

Jaya's appeal hearing today

சொத்துக்குவிப்பு வழக்கில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறப்பு நீதிமன்றம் கடந்த மாதம் 27ம் தேதி தீர்ப்பு அளித்தது. இதையடுத்து பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்ட அவர்களின் ஜாமீன் மனுக்களை கர்நாடக உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும் அவர்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை அக்டோபர் 27ம் தேதி நடைபெறும் என்று நீதிமன்றம் அறிவித்தது.

இதையடுத்து அவர்கள் உச்ச நீதிமன்றத்தை அணுகி ஜாமீன் பெற்று வெளியே வந்தனர். இந்நிலையில் அவர்களின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை கர்நாடக உயர் நீதிமன்றத்தில் இன்று நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இன்று விசாரணைக்கு வரும் வழக்குகள் பட்டியலில் ஜெயலலிதாவின் மேல்முறையீட்டு மனு குறித்த வழக்கு இல்லை.

அதனால் மேல்முறையீட்டு வழக்கு இன்று விசாரணைக்கு வராது என்று தெரிகிறது. மேலும் அந்த வழக்கு இந்த வாரத்தில் விசாரணைக்கு வரலாம் என்று கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+