ஜெயலலிதா விடுதலையும், ஆறு அதிர்வுகளும்!
Subscribe to Oneindia Tamil
பெங்களூரு: ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதையும், அதையும் தொடர்ந்து நடைபெற்ற முக்கியமான 6 ஃபாலோ-அப்புகளும் இதோ..

- சொத்துக் குவிப்பு வழக்கில், ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரும் விடுதலை செய்யப்படுவதாக கர்நாடக ஹைகோர்ட் தீர்ப்பு வழங்கியது.
- தீர்ப்பை தொடர்ந்து சில மணி நேரங்களில் ஜெயலலிதா ஒரு அறிக்கை வெளியிட்டார். தன்னை அரசியல்ரீதியாக ஒழித்துக்கட்ட திமுக சதி செய்திருந்ததாகவும், தான் புடம்போட்ட தங்கமாக வெளியே வந்துள்ளதாகவும் ஜெயலலிதா கூறியிருந்தார்.
- ஜெயலலிதாவை, போயஸ் கார்டனில், முதல்வர் பன்னீர்செல்வம் சந்தித்து ஆலோசனை நடத்தினார். முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய தயாராக இருக்குமாறு, பன்னீர்செல்வத்துக்கு, ஜெயலலிதா அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.
- திமுக தலைவர் கருணாநிதி ஒரு அறிக்கை வெளியிட்டார். இத்தோடு வழக்கு முடிந்துவிடவில்லை என்று அவர் கூறியதுடன், மனசாட்சியே பெரிய கோர்ட் என்றும் மறைமுகமாக தாக்கினார்.
- சொத்துக்குவிப்பு வழக்கின் சூத்திரதாரியும், தற்போது பாஜக நிர்வாகியுமாக உள்ள சுப்பிரமணியன்சுவாமி, தீர்ப்பை கேட்டு தான் அதிர்ந்துவிட்டதாக கூறினார்.
- பிரதமர் நரேந்திரமோடி, ஜெயலலிதாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வழக்கில் வெற்றி பெற்றதற்காக வாழ்த்து தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications