இந்தக் காரணங்களுக்காக ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கிடைக்க வாய்ப்புள்ளதா?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வர இருக்கும் ஜெயலலிதாவின் ஜாமீன் மீதான வழக்கில் சாதகமான சில காரணிகளும் நிலவி வருகின்றன.

இந்தக் காரணங்களை நீதிபதிகள் பரிவுடன் பரிசீலித்தால் அவருக்கு ஜாமீன் கிடைக்க வாய்ப்புள்ளதாக நம்பிக்கை நிலவுகிறது.

Jayalalitha asset case…

வழக்கில் ரூ. 66 கோடி என்று குறிப்பிடப்பட்டுள்ளதால், ரூ. 100 கோடி அபராதம் என்று அதிகபட்சமாக வழங்கப்பட்டதை பெரிதாக்கி அதை முதன்மையாக வைத்து ஜாமீன் கேட்க வாய்ப்புண்டு.

உடல்நிலை, 4 வருட காலமே தண்டனை ஆகியவற்றை முன் வைத்து எடுத்துக்காட்டான பல ஜாமீன் வழக்குகளைக் கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்கப்படலாம்.

சுப்பிரமணிய சாமியின் தற்போதைய மனுவானது, வெறும் விளம்பரத்திற்கான ஒன்று என்ற கருத்து நிலவுவது

ஐபிசி 436 மற்றும் 437 ஆகிய சட்டப் பிரிவுகளின் அடிப்படையில் பெண்கள், உடல்நிலை சரியில்லாதவர்களுக்கான சலுகைகளின் அடிப்படையிலும் ஜாமீன் வழங்கப்படலாம்.

பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் ஜெயலலிதாவிற்கு கிட்டதட்ட 4 கிலோ எடை குறைந்துள்ளதால், உடல்நிலை மேலும் பாதிக்கப்படலாம் என்ற அடிப்படையிலும் ஜாமீன் தரப்படலாம்

இவை ஜெயலலிதா தரப்புக்கு உள்ள சாதகமாக காரணிகளே தவிர, இவையே ஜாமீன் நிச்சயமாகக் கிடைக்க வைத்துவிடும் காரணிகள் அல்ல

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+