மீண்டும் ஜெ முதல்வரானால் தமிழகம் சிறப்பான நிலையை அடையும்: சொல்வது பொன்.ராதாகிருஷ்ணன்
டெல்லி: ஜெயலலிதா மீண்டும் முதல்வரானால் தமிழகம் சிறப்பான நிலையை அடையும் என்று மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். தமிழகத்தில் ஏராளமான திட்டங்களை சிந்தித்து செயல்படுத்தக் கூடிய வல்லமை படைத்தவர் ஜெயலலிதா என்றும் அவர் கூறியுள்ளார்.

மேகாலயா மாநில ஆளுநராக தமிழக பாஜகவை சேர்ந்த சண்முகநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். டெல்லியில் அவருக்கு வாழ்த்து தெரிவித்த பொன்.ராதாகிருஷ்ணன், செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் ஜெயலலிதா விடுதலையானது மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்தார். மேலும், தீர்ப்பை விமர்சித்தால் நீதிமன்றத்தின் மீதான நம்பிக்கை போய் விடும் என்றும் அவர் கூறினார்.
ஜெயலலிதா மீண்டும் முதல்வரானால் தமிழகம் சிறப்பான நிலையை அடையும் என்று தெரிவித்த பொன்.ராதாகிருஷ்ணன், ஏராளமான திட்டங்களை சிந்தித்து செயல்படுத்தக் கூடிய வல்லமை படைத்தவர் ஜெயலலிதா என்று புகழாரம் சூட்டினார்.












Click it and Unblock the Notifications