ஜெ. மீதான சொத்து குவிப்பு வழக்கு- டிச.12க்கு ஒத்திவைப்பு!
Subscribe to Oneindia Tamil

முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு கர்நாடக மாநிலம் பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் அசையும் சொத்துக்களை பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று திமுக சார்பில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
இதற்கு பதிலளித்த ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர்கள், சென்னை உயர்நீதிமன்றத்தில் சொத்துக்கள் பாதுகாப்பாக இருக்கின்றன, திமுக விளம்பரம் தேடுவதற்காக சொத்துக்களை ஒப்படைக்க கோருகிறது என்று தெரிவித்தனர். மேலும் அசையும் சொத்துக்கள் பெங்களூர் நீதிமன்றத்தில் இருப்பது நல்லதுதான் என வழக்கறிஞர் பவானிசிங் கூறியிருந்தார்.
இருதரப்பு வாதங்களையும் இன்று கேட்ட பின்னர் இந்த வழக்கை வரும் 12- ந் தேதிக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஒத்தி வைத்தார்.












Click it and Unblock the Notifications