ஜெயலலிதாவின் உயிர் பிரிந்தது டிசம்பர் 5-ஆம் தேதிதான்.. சொல்கிறது தமிழக அரசு
டிசம்பர் 5-ஆம் தேதிதான் ஜெயலலிதாவின் உயிர் பிரிந்தது என்று எய்ம்ஸ் மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக தமிழக அரசு கூறியுள்ளது.
டெல்லி: சென்னை அப்பல்லோவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதா டிசம்பர் 5-ஆம் தேதிதான் அவரது உயிர் பிரிந்தது என்று எய்ம்ஸ் மரு்ததுவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோதே உயிரற்ற நிலையில் தான் இருந்தார் என்றும் டிசம்பர் 5-ஆம் தேதிக்கு முன்னரே அவர் இறந்திருக்கலாம் என்றும் பல்வேறு ஊகங்கள் வெளியாகின.
(ஜெ. சிகிச்சை: தமிழக அரசு வெளியிட்ட அப்பல்லோ மருத்துமனை. எய்ம்ஸ் மருத்துவர்களின் அறிக்கைகள்)

இந்நிலையில் எய்ம்ஸ் டாக்டர்கள் குழு அளித்த சிகிச்சை விவரங்கள் குறித்த அறிக்கையை டெல்லியில் தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வெளியிட்டார்.
அதில், அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவுக்கு இதயம் செயலிழந்த பிறகு அவரை காப்பாற்ற அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தன. பின்னர் டிசம்பர் 5-ஆம் தேதி 11.30 மணி அளவிலேயே அவர் இறந்தார் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.












Click it and Unblock the Notifications