காவிரியில் கழிவுநீர்: தமிழகம் கேஸ் போட 'அரிய' காரணம் கண்டுபிடித்த மத்திய சட்ட அமைச்சர்!
பெங்களூர்: காவிரியில் கழிவு நீர் கலக்கப்படுவதை எதிர்த்து தமிழகம் தொடர்ந்த வழக்கை கர்நாடகா சட்டப்படி எதிர்கொள்ளும் என்று மத்திய சட்டத்துறை அமைச்சர் சதானந்தகவுடா தெரிவித்துள்ளார்.
பெங்களூரில் இன்று சதானந்தகவுடா செய்தியாளர்கள் சந்திப்பு நிகழ்த்தினார். அப்போது, காவிரியில் கழிவு நீரை கர்நாடகம் கலப்பதை எதிர்த்து தமிழகம் தொடர்ந்த வழக்கு குறித்து நிருபர்கள் கேட்டனர். அதற்கு பதிலளித்த சதானந்த கவுடா, கர்நாடகா சட்டப்படி இப்பிரச்சினையை எதிர்கொள்ளும். ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் ஜெயலலிதா போட்டியிடுகிறார். அத்தேர்தலில் வெற்றி பெறுவதை மனதில் வைத்து வழக்கு தொடர்ந்துள்ளார் என்றார் சதானந்தகவுடா.

மத்திய சட்ட அமைச்சராக உள்ள ஒருவரே, கோர்ட்டில் தொடரப்பட்ட ஒரு வழக்கிற்கு உள்நோக்கம் கற்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக பேட்டியளித்த சதானந்த கவுடா, நாடு முழுவதும் தொழில்பயிற்சி மையங்கள் அமைக்கப்படும். 2 கோடி பேருக்கு பயிற்சியும், வேலை வாய்ப்பும் உருவாகும். பெங்களூர்-பீன்யாவில் ரூ.100 கோடி செலவில் அமைக்கப்பட்டுவரும் தொழில்பயிற்சி மையப் பணிகள் விரைவில் முடிவடையும் என்றார்.












Click it and Unblock the Notifications