சுப்ரீம் கோர்ட்டில் இன்று மீண்டும் சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணை! ஜெ. தரப்பு வாதிட வாய்ப்பு
டெல்லி: தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணை இன்று சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் விசாரணைக்கு வருகிறது. அப்போது ஜெயலலிதா தரப்பு தங்கள் வாதத்தை முன்வைக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
சொத்துக்குவிப்பு வழக்கில், தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு, பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் வழங்கிய 4 வருட சிறை தண்டனையை, கர்நாடக ஹைகோர்ட் ரத்து செய்து அவரை நிரபராதி என கூறி விடுதலை செய்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில், கர்நாடகா, அன்பழகன் தரப்பு மனு தாக்கல் செய்துள்ளது. நீதிமன்ற நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமித்வா ராய் ஆகியோர் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
முதலில் கர்நாடக தரப்பு வாதங்களை சமர்ப்பித்தது. தாவே, ஆச்சாரியா போன்ற மூத்த வழக்கறிஞர்கள் கர்நாடக ஹைகோர்ட்டில் வழங்கிய தீர்ப்பில் பிழை இருப்பதாக வாதாடினர்.
நமது எம்.ஜி.ஆர் சந்தா வருவாய் குறித்தும் பல ஐயப்பாடுகளை எழுப்பினர். ஜெயலலிதா பல்வேறு முறைகேடுகளை செய்து சொத்துக்குவிப்பை மறைத்ததாக ஆச்சாரியா வாதிட்டார்.
ஆச்சாரியா வாதம் ஏறத்தாழ நிறைவுற்ற நிலையில், வழக்கு மார்ச் 29ம் தேதிக்கு (இன்று) ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இன்று வழக்கு விசாரணைக்கு வரும்போது, ஆச்சாரியா சில சந்தேகங்களை முன்வைத்து வாதிட வாய்ப்புள்ளது. இதையடுத்து இன்றையே ஜெயலலிதா தரப்பு வாதம் முன்வைக்கப்படவும் வாய்ப்புள்ளது.
அன்பழகன் தரப்புக்கு ஏதேனும், சந்தேகங்கள் இருப்பின் அதை தெரியப்படுத்த மட்டும் வாய்ப்பு தரப்படும் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications