ஜெ. 'குற்றவாளி'யே- திட்டவட்டமாக சொல்லும் சட்டவல்லுநர்கள்! படமும் வைக்க முடியாது- மண்டபமும் கிடையாது!
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா குற்றவாளிதான் என திட்டவட்டமாக கூறுகின்றனர் சட்டவல்லுநர்கள். அதனால் ஜெயலலிதா படத்தை அரசு அலுவலகங்களில் வைக்கவே முடியாதாம்.
டெல்லி: சொத்து குவிப்பு வழக்கில் கர்நாடகாவின் சீராய்வு மனுவை நிராகரித்துவிட்டபோதும் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி ஜெயலலிதா குற்றவாளிதான்; ஆகையால் அவரது படத்தை அரசு அலுவலகங்களில் வைக்கவும் முடியாது; அவருக்கு நினைவு மண்டபமும் கட்டவும் முடியாது என்பது சட்டவல்லுநர்களின் திட்டவட்டமான கருத்து.
ஜெயலலிதாவுக்கு சிறை தண்டனை மற்றும் அபராதத் தொகையை விதிக்க கோரும் கர்நாடகா அரசின் சீராய்வு மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம். உடனே சசிகலாவும் அவரது அடிப்பொடிகளும் ஆஹா, ஜெயலலிதாவை குற்றவாளி இல்லை என உச்சநீதிமன்றமே சொல்லிவிட்டது; ஆகையால் சசிகலா விடுதலையாகிடுவார் என பகல் கனவு காண்கின்றனர்.

அபராதத்துக்காகவே சீராய்வு மனு
இது தொடர்பாக சட்டவல்லுநர்கள் கூறுகையில், உச்சநீதிமன்றம் பிப்ரவரி 14-ந் தேதி அளித்த தீர்ப்பின்படி ஜெயலலிதா குற்றவாளிதான். தற்போது கர்நாடக அரசு, அபராதத் தொகை ரூ100 கோடி வசூலிக்க ஏதுவாக ஜெயலலிதா குற்றவாளி என அறிவித்து சிறை தண்டனை மற்றும் அபராதத் தொகையை விதிக்க வேண்டும்; அந்த தொகையை எப்படி வசூலிப்பது எனவும் விளக்க வேண்டும் எனக் கோரிதான் சீராய்வு மனுவைத் தாக்கல் செய்தது.

இறந்துவிட்டார் என்பதுதான் காரணம்
இதன் மீது தீர்ப்பளித்த உச்சநீதிமன்றமோ, சட்ட விதிகளின் படி குற்றவாளியாக இருந்தாலும் இறந்துவிட்ட ஒரு நபருக்கு சிறை தண்டனை மற்றும் அபராதத் தொகை விதிக்க முடியாது; ஆகையால் கர்நாடகாவின் சீராய்வு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்றே கூறியுள்ளது. ஆக ஜெயலலிதா குற்றவாளிதான்; அதேநேரத்தில் அவருக்கான சிறை தண்டனை மற்றும் அபராதத் தொகை விதிக்க இயலாது என்பதுதான் உச்சநீதிமன்ற புதிய தீர்ப்பு.

ஜெ. குற்றவாளியே
இந்த உத்தரவால் ஜெயலலிதா குற்றமற்றவர் என்பது பொருள் அல்ல. அதனால் சொத்து குவிப்பு வழக்கின் "குற்றவாளி" என உச்சநீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்ட ஜெயலலிதாவின் படங்களை அரசு அலுவலகங்களில் வைக்கவும் முடியாது; அவருக்கு நினைவு மண்டபம் கட்டமும் முடியாது என்பதுதான் யதார்த்தம்.

அபத்த குரல்கள்
அதேபோல் 'குற்றவாளி' ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா போன்ற விருதெல்லாம் வழங்க வேண்டும் என்ற கூச்சல்களுக்கும் இடமே கிடையாது என்பது சட்டவல்லுநர்களின் திட்டவட்டமாக கருத்து. உச்சநீதிமன்ற உத்தரவுக்கு உள்நோக்கம் கற்பித்து ஜெயலலிதா நிரபராதி என பேசுவதும் எழுவதும் அவதூறுதான் என்பதும் சட்டவல்லுநர்கள் கருத்து.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications