பாஜகவில் சேர்ந்து கெஜ்ரிவாலை எதிர்த்து போட்டியிடணும்: கட்சித் தாவல் ஜெயபிரதா
டெல்லி: நடிகை ஜெயபிரதா ராஷ்ட்ரிய லோக்தள கட்சியில் இருந்து விலகி பாஜகவில் சேர்ந்து டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலை எதிர்த்து போட்டியிட விரும்புகிறார்.
தெலுங்கு தேசம் கட்சியில் சேர்ந்து தனது அரசியல் வாழ்க்கையை துவங்கியவர் நடிகை ஜெயபிரதா. அவர் தெலுங்கு தேசத்தில் இருந்து சமாஜ்வாடி கட்சியில் சேர்ந்தார். சமாஜ்வாடி கட்சியில் அவருக்கு அமர் சிங் ஆதரவாக இருந்தார். இந்நிலையில் அவர்கள் இருவரும் கட்சிக்கு எதிராக செயல்படுவதாகக் கூறி கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.

ஜெயபிரதா ராஷ்ட்ரிய லோக்தள கட்சியில் சேர்ந்து அண்மையில் நடந்த லோக்சபா தேர்தலில் உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள பிஜ்னோர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இந்நிலையில் அவர் பாஜகவில் சேர்ந்து டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலை எதிர்த்து போட்டியிட விரும்புகிறார்.
ஜெயபிரதாவுடன் அமர் சிங்கும் பாஜகவில் சேர உள்ளாராம். இது தொடர்பாக அமர் சிங் பாஜக தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
இது குறித்து ஜெயபிரதா கூறுகையில்,
மோடிஜியின் தலைமை குணத்தை பார்த்து அனைவரும் வியந்து கொண்டிருக்கின்றனர். பல பெரிய தலைவர்கள் அவருடன் பணியாற்ற விரும்புகிறார்கள். இந்நிலையில் நான் பாஜகவில் இணைய விரும்புகிறேன். இது தொடர்பாக அமர் சிங் முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அவர் பாஜக தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் என்றார்.
-
18 தொகுதிகளில் பாஜக வெல்வது கடினம்? திமுகவிடம் கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிச்சாமி! தாமரைக்கு ‘செக்’ -
நயினாரை விடவே கூடாது.. சாத்தூரில் வீழ்த்த ஸ்டாலின் ‘ஸ்கெட்ச்’.. இறங்கும் திமுகவின் ‘பெரிய தலை’ -
ஷாக்கில் சரவணன்! எடப்பாடிக்காக விழுந்து விழுந்து வேலை பார்ப்பாரே அவரா? பாஜக விஐபிகள் மெகா ஸ்கெட்ச் -
பாஜகவின் 27 வேட்பாளர்கள் இவர்கள்தானா? வெளியான உத்தேச பட்டியல்.. அண்ணாமலைக்கு சீட் இல்லை? -
ஜோதிடர் சொன்ன வார்த்தை? நயினார் நாகேந்திரன் நெல்லை தொகுதியில் போட்டியிடாதது ஏன்? பரபரப்பு தகவல் -
வேட்பாளர் அறிவிப்பு இருக்கட்டும்.. இப்படி ஏன் செஞ்சீங்க? எடப்பாடி பழனிசாமி மீது கொந்தளித்த ரரக்கள்! -
கோவை வடக்கில் அண்ணாமலை.. வானதி சீனிவாசனுக்கு பதில் களம் இறங்க போகிறாரா? -
அண்ணாமலைக்கு சீட் கொடுக்க கூடாது.. எடப்பாடி எடுத்த முடிவு.. பாஜக தொகுதி பங்கீட்டில் என்ன நடந்தது? -
அண்ணாமலை சட்டமன்றம் செல்ல வேண்டும்.. அதுவே என் விருப்பம்.. வானதி சீனிவாசன் சொன்ன வார்த்தை! -
தேர்தல் நேரத்தில் கிளம்பிய பூதம்.. ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனை ED விசாரிக்க மனு! -
குமரியில் காலியாகும் அதிமுகவின் அடித்தளம்.. 4 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக.. சோர்வடைந்த தொண்டர்கள்! -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி.. வெயிட்டான தொகுதிகளை வச்சுகிட்டாரே! எந்தெந்த தொகுதிகளில் போட்டி?












Click it and Unblock the Notifications