காவிரி விவகாரம்... மக்கள் சட்டத்தை கையிலெடுக்க கூடாது: கர்நாடகா அமைச்சர் ஜெயச்சந்திரா #cauvery
பெங்களூரு: காவிரி நீர் திறப்புக்கு எதிரான போராட்டங்களின் போது மக்கள் சட்டத்தைக் கையிலெடுக்கக் கூடாது என்று கர்நாடகா சட்டத்துறை அமைச்சர் ஜெயச்சந்திரா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
காவிரியில் தமிழகத்துக்கு 15,000 கன அடிநீரை 10 நாட்களுக்குத் திறந்துவிட கர்நாடகாவுக்கு உத்தரவிட்டது உச்சநீதிமன்றம்... இந்த உத்தரவுக்கு எதிராக கர்நாடகா விவசாயிகள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
My appeal to ppl is to keep calm & not take law in their hands:TB Jaychandra,Karnataka Law Minister on Cauvery issue pic.twitter.com/mGKuj4ZLtO
— ANI (@ANI_news) September 6, 2016
மாண்டியாவில் இன்று முழு அடைப்புப் போராட்டத்துக்கு விவசாயிகள் அழைப்புவிடுத்துள்ளனர். பல இடங்களில் முதல்வர் ஜெயலலிதாவின் உருவபொம்மைகள் எரிக்கப்பட்டு வருகின்றன.
இதனிடையே அம்மாநில சட்டத்துறை அமைச்சர் ஜெயச்சந்திரா, போராடுகிற விவசாயிகள் சட்டத்தைக் கையிலெடுத்துக் கொள்ளக் கூடாது; இதை அனுமதிக்க முடியாது என்று தெரிவித்திருக்கிறார்.