சபாநாயகர் பதவிக்கு ஓகே... துணை முதல்வர் பதவிக்காக இன்னும் முட்டி மோதும் காங்.. பிடிகொடுக்காத ஜேடிஎஸ்
இரு துணை முதல்வர் பதவி வேண்டும் என்ற காங்கிரஸ் கட்சியின் கோரிக்கைக்கு ஜேடிஎஸ் பச்சைக் கொடி காட்டவில்லை.
Recommended Video

பெங்களூர்: இரு துணை முதல்வர் பதவி வேண்டும் என்று காங்கிரஸ் கோரி வரும் நிலையில் அந்த கோரிக்கைக்கு ஜேடிஎஸ் ஒப்புக் கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. இந்த விவகாரம் குறித்து இரு கட்சிகளும் பரிசீலனை செய்து வருகிறது.
கர்நாடகத்தில் சட்டசபை தேர்தல் முடிவுகளில் பல்வேறு திருப்பங்கள் ஏற்பட்டு காங்கிரஸ் -ஜேடிஎஸ் கூட்டணி சார்பில் குமாரசாமி முதல்வராக பதவியேற்கவுள்ளார்.
இந்நிலையில் எந்தெந்த கட்சிக்கு அமைச்சரவையில் எத்தனை இடம் உண்டு என்பது குறித்து பேச்சு எழுந்தபோது அதிக இடங்களில் வெற்றி பெற்ற காங்கிரஸ் தங்களுக்கு அமைச்சரவையில் அதிக இடங்களை தர வேண்டும் என கோரியது.

சபாநாயகர்
இரு துணை முதல்வர் பதவியை ஏற்படுத்தவும் காங்கிரஸ் கோரியது. அதில் தலித் சமூகத்தைச் சேர்ந்த பரமேஸ்வராவுக்கும் மற்றும் லிங்காயத்து சமூகத்தை சேர்ந்த சிவசங்கரப்பாவுக்கும் வழங்கப்பட இருப்பதாக கூறப்பட்டது.

துணை முதல்வர் யாருக்கு
இதுதொடர்பாக குமாரசாமி சோனியா மற்றும் ராகுல் காந்தியுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது பதவி பட்டியல் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும் அரசை சுமூகமாக நடத்த ஒத்துழைப்பு கமிட்டியை உருவாக்க இருகட்சிகளும் ஒப்புதல் தெரிவித்தன.

ஒக்கலிகா சமூகம்
இந்நிலையில் துணை முதல்வர் பதவியில் ஒன்றை ஒக்கலிக்கா சமூகத்தை சேர்ந்த சிவகுமாருக்கு வழங்கலாம் என்று பேச்சு அடிபடுகிறது. இதுகுறித்து சிவகுமார் கூறுகையில் கட்சி தலைமை முடிவு என்ன சொல்கிறதோ அதன்படி செயல்படுவேன் என்றார்.

சபாநாயகர் பதவி ஓகே
சபாநாயகர் பதவியை காங்கிரஸுக்கு கொடுக்க ஜேடிஎஸ் ஒப்புதல் அளித்துவிட்டது. ஆனால் இரு துணை முதல்வர்களை காங்கிரஸ் கட்சிக்கே கொடுப்பது குறித்து யோசனையில் உள்ளது. மேலும் அந்த இரு பதவிகளில் ஒன்றை ஜேடிஎஸ்ஸுக்கு வழங்க வேண்டும் என்று கேட்கப்படுவதால் இதுகுறித்த பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது.
-
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்! -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications