தங்கள் கட்சிக்கு ஓட்டு போடாதவரை கன்னத்தில் அறைந்த நிதிஷ் குமார் கட்சி எம்.எல்.ஏ.
கோபால்கஞ்ச்: பீகாரில் தங்கள் கட்சிக்கு வாக்களிக்காத நபரை அறைந்த ஐக்கிய ஜனதாதள எம்.எல்.ஏ. பப்பு பாண்டே மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பீகாரில் 6 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று காலை துவங்கி நடந்து வருகிறது. இந்நிலையில் நயாகாவ்ன் துல்சியா கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் ஒருவர் வாக்களித்துவிட்டு வெளியே வந்துள்ளார். அவர் தங்கள் கட்சிக்கு வாக்களிக்கவில்லை என்பது அறிந்த குச்யகோட் தொகுதி ஐக்கிய ஜனதாதள கட்சி எம்.எல்.ஏ.வான அம்ரேந்திர குமார் பாண்டே (எ) பப்பு பாண்டே அந்த வாக்காளரை கன்னத்தில் அறைந்துள்ளார்.

மேலும் பாண்டேவின் உதவியாளர்களும் அந்த வாக்காளரை தாக்கியுள்ளனர். அந்த வாக்காளர் காங்கிரஸ் ஆதரவாளர் என்று கூறப்படுகிறது. அவர் அளித்த புகாரின்பேரில் போலீசார் பாண்டே மற்றும் அவரது உதவியாளர்கள் 9 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
ஆனால் பாண்டேவோ சம்பவம் நடந்த இடத்தில் தான் இல்லவே இல்லை என்று தெரிவித்துள்ளார்.
-
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல்












Click it and Unblock the Notifications