நாக்கை அறுத்துவிடுவேன்: காங்கிரஸ் எம்.எல்.ஏ.வை மிரட்டிய நிதிஷ் கட்சி எம்.எல்.ஏ.
பாட்னா: பீகாரில் சட்டசபை வாசலில் வைத்து காங்கிரஸ் எம்.எல்.ஏ. திலிப் சவுத்ரியின் நாக்கை அறுப்பதாக ஐக்கிய ஜனதாதள கட்சி எம்.எல்.ஏ. ராஜ் கிஷோர் குஸ்வாஹா மிரட்டியுள்ளார்.
பீகாரில் முதல்வர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதள கட்சியும், காங்கிரஸும் கூட்டணி கட்சிகள் ஆகும். இந்நிலையில் பீகார் சட்டசபை வாசலில் நிதிஷ் குமார் கட்சி எம்.எல்.ஏ. ராஜ் கிஷோர் குஸ்வாஹா மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ. திலிப் சவுத்ரி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது கிஷோர் திலிப்பை பார்த்து உன் நாக்கை அறுத்துவிடுவேன் என்று ஆவேசமாக கூறினார். இதை பார்த்த காவலர்கள் ஓடி வந்து அவர்களை சமாதானம் செய்து கலைந்து போகச் செய்தனர்.
சட்டசபையில் இருந்து வெளியே வந்து கொண்டிருக்கையில் திடீர் என அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பிற தலைவர்கள் அப்படியே நின்றுவிட்டனர்.
இந்த சம்பவத்தால் சட்டசபை வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கூட்டணி கட்சியினரே இப்படி மோதிக் கொள்வதை பாஜக எம்.பி. கிரிராஜ் சிங் கிண்டல் செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications