தீவிர அரசியலிலிருந்து ஓய்வு பெறுவதாக தேவெ கெளடா அறிவிப்பு.. கர்நாடகாவில் பரபரப்பு
தீவிர அரசியலிலிருந்து ஓய்வு பெறுவதாக மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தேசிய தலைவர் தேவெ கெளடா அறிவித்துள்ளார்.
Recommended Video

பெங்களூர்: தீவிர அரசியலிலிருந்து ஓய்வு பெறுவதாக மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தேசிய தலைவர் தேவெ கெளடா அறிவித்துள்ளார்.
1953ல் காங்கிரஸ் கட்சியில் அரசியல் பயணத்தை தொடங்கிய மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தேசிய தலைவர் தேவெ கெளடா தற்போது அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். ஜனதா கட்சி, ஜனதா தளம், மதசார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகளில் இவர் முக்கிய பதவிகளை வகித்து இருக்கிறார்.

1996ல் இவர் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் பிரதமராக இருந்தார். அதேபோல் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் இவர் கர்நாடக முதல்வராக 1994-1996 வரை இருந்துள்ளார்.
தற்போது இவர் ஜனதா தளம் கட்சியின் தேசிய தலைவராக இருக்கிறார். இவரின் மகன் குமாரசாமி கர்நாடக முதல்வராக உள்ளார். மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் கூட்டணி ஆட்சி நடத்துகிறது.
இந்த நிலையில்தான் தீவிர அரசியலிலிருந்து ஓய்வு பெறுவதாக தேவெ கெளடா அறிவித்துள்ளார். 2019 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்றும் தெரிவித்துள்ளார்.
தேவெ கெளடா அறிவிப்பால் கர்நாடகாவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திமுக தலைவர் கருணாநிதி மறைந்தபோது சென்னை வந்திருந்தார் தேவே கெளடா. மெரினாவில் அவர் பெரும் சோகத்துடன் அஞ்சலி செலுத்த வந்திருந்தார்.
தேவெ கெளடா பிரதமராவதற்கு கருணாநிதி பெரும் உதவியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அவர் இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு -
திரிஷா பற்றிய மொத்த பிரச்சனைகளுக்கும் ஒரே போஸ்டில் அவரே பதில்.. இப்படி ஒரு ரியாக்ஷனை எதிர்பார்க்கலையே












Click it and Unblock the Notifications