'ரன்வே' விபத்தில் சிக்கிய கோவா-மும்பை ஜெட் ஏர்வேஸ் விமானம்.. 154 பயணிகள் தப்பினர்
பானாஜி: கோவா மாநிலம் டபோலிம் ஏர்போர்ட்டிலிருந்து இன்று காலை மும்பை நோக்கி ஜெட் ஏர்வேஸ் விமானம் (9w2374) கிளம்பியது.
இந்த விமானத்தில் 154 பயணிகள், 7 ஊழியர்கள் இருந்தனர். விமானம் ஓடு தளத்தில் ஓடத்தொடங்கியபோது திடீரென கடுமையாக குலுங்கியபடி ரன் வேயிலிருந்து நழுவி ஓடத் தொடங்கியது. இதனால் ரன் வேயிலிருந்து விமானம் கீழே இறங்கியது. இருப்பினும் அதற்கு மேல் ஓடவிடாமல், தக்க நேரத்தில் பைலட் விமானத்தை கட்டுக்குள் கொண்டுவந்து நிறுத்திவிட்டார்.
இதையடுத்து அவசர, அவசரமாக பயணிகள் வெளியேற்றப்பட்டனர். இந்த வெளியேற்றத்தின்போது சில பயணிகள் காயமடைந்ததாக தெரிகிறது. நடக்க இயலாத அவர்களை மருத்துவ ஊழியர்கள் உபகரணங்கள் மூலம் தூக்கிச் சென்றனர்.
Visuals of passengers,who sustained minor injuries,being taken fr treatment aftr Jet Airways flight 9W2374 skidded off runway at Goa airport pic.twitter.com/bMHZbhPL5M
— ANI (@ANI_news) December 27, 2016
இந்த சம்பவத்திற்காக ஜெட் ஏர்வேஸ் வருத்தம் தெரிவித்துள்ளது. அதேநேரம், தக்க நேரத்தில் விமானம் நிறுத்தப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.