கண்ணு மண்ணு தெரியாமல் கண்டபடி தரையிறங்கிய ஜெட் விமானம்.. திருவனந்தபுரம் ஏர்போர்ட்டில் நடந்த திகில்
டெல்லி: விமான நிலைய அதிகாரிகளின் அனுமதியை பெறாமலேயே 'கண்மூடித்தனமாக' திருவனந்தபுரம் விமான நிலையத்தில் ஜெட் ஏர்வேஸ் விமானம் ஒன்று தரையிறங்கியுள்ள சம்பவத்தை மத்திய அரசின், சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) அம்பலப்படுத்தியுள்ளது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 17ம் தேதி நடைபெற்ற இந்த தரையிறக்க சம்பவம் குறித்து டிஜிசிஏ அளித்த அறிக்கை தற்போது வெளியாகியுள்ளது.

தோகாவிலிருந்து கொச்சி நோக்கி வந்த போயிங் 737 ரக பெரிய விமானத்தால் மோசமான வானிலை காரணமாக கொச்சியில் தரையிறங்க முடியவில்லை. 6 முறை முயன்றும், தரையிறக்க முடியாத நிலை நிலவியுள்ளது. எனவே அவசரமாக திருவனந்தபுரத்தில் தரையிறங்க விமான கட்டுப்பாட்டு அறை அதிகாரிகளிடம் பைலட் அனுமதி கேட்டுள்ளார். ரன் வேயில் வேறு விமானங்கள் இருக்கும்பட்சத்தில், புதிய விமானத்தை இறக்குவதற்கு அனுமதிக்க முடியாது என்பதால், முன்கூட்டிய அனுமதி தேவைப்பட்டது.
திருவனந்தபுரம் விமான நிலையத்திலும் தரையிறங்க அனுமதி கிடைக்கவில்லை. அதற்கு காரணம், ஓடுதளம் தெரியாத அளவுக்கு அங்கு வானிலை மோசமாக இருந்ததுதான். ஆனால், அதற்குள் விமானத்தின் எரிபொருள் மளமளவென தீர்ந்து 349 கிலோ என்ற அளவுக்கு குறைந்துள்ளது. இது மிகவும் குறைந்த அளவாகும். இதற்கு மேலும் பறந்தால் எரிபொருள் இன்றி விமானம் தரையில் விழுந்து நொறுங்கும் என்பது உறுதியாகிவிட்டது.
இதையடுத்து விமான நிலைய அதிகாரிகளிடம் தகவலை கூறிய பைலட், தனக்கு ஓடுபாதை கண்ணுக்கு தெரியவில்லை என்றும், இருப்பினும், கண்ணைமூடி இறங்குவதாகவும் கூறி விமானத்தை தரையிறக்கியுள்ளார். இந்த வாய்ஸ் ரெக்கார்ட் விமான துறையிடம் உள்ளதாம். அதிருஷ்டவசமாக கண்மூடித்தனமாக இறக்கப்பட்டாலும், ரன்வேயில் சரியாக விமானம் தரையிறங்கியுள்ளது. இதனால் விமான நிலையத்திலோ, தரையிறங்கிய விமானத்தில் இருந்த பயணிகளுக்கோ எதுவும் ஏற்படாமல் உயிர் தப்பியுள்ளனர்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications