ஜெட் ஏர்வேஸ் விமானிக்கு திடீர் சுகவீனம் – டெல்லியில் அவசர தரையிறக்கம்
டெல்லி: பாங்காங் ஜெட் ஏர்வேஸ் விமானத்தின் விமானிக்கு திடீர் உடநலக் கோளாறு ஏற்பட்டதால் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.
ஜெட் ஏர்வேஸ்சுக்கு சொந்தமான விமானம் 9 டபிள்யூ063 பாங்காங்கில் இருந்து 200 பயணிகளுடன் நேற்று இரவு புறப்பட்டது.
விமானம் நடுவானில் பறந்து கொண்டு இருக்கும் போது தலைமை விமானி ராஜீவ் மல்கோத்ராவுக்கு திடீர் என உடல நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக உதவி விமானி விமான போக்குவரத்து விதிகளின் படி விமானத்தின் கட்டுபாட்டை எடுத்து கொண்டார்.
உடனடியாக விமானம் இந்திராகாந்தி விமான நிலையத்தில் தரையிறங்க முன்னுரிமை அளிக்கப்பட்டது. துணை விமானி மல்கோத்த்ரா விமானத்தில் பயணம் செய்த மற்றொரு ஜெட் ஏர்வே விமானி உதவியுடன் விமானத்தை பாதுகாப்பாக தரையிறக்கினார்.
ஆனால் விமானத்தின் கீல் சிக்கி கொண்டது. அதனையடுத்து உடனடியாக டோப் டிராக்டர் வரவழைக்கபட்டு விமானம் பார்க்கிங் செய்யபட்டது. இது குறித்து விசாரணை நடத்த விமான போக்குவரத்து பொது இயக்குநரகம் உத்தரவிட்டு உள்ளது.
உடல நலம் பாதிக்கப்பட்ட விமான கேப்டன் ராஜீவ் மல்கோத்ராவை விமானத்தில் பயணம் செய்த ஒரு டாக்டர் பரிசோதனை செய்துள்ளார் என விமான நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்து உள்ளார்.